Saturday, February 9, 2008

கொன்னவங்க எந்த கூட்டம்னு ....................

ஹே ராம்... ராம், ராம்... ஆஹ்...! என்ன தான் சொன்னார் காந்தி? எதுவுமே சொல்லலியாம்; கல்யாணம் சொல்கிறார்



சென்னை :"ஹே ராம்...ராம், ராம்...ஆஹ்...!' கடந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி மாலை 5.10 மணிக்கு, டில்லி பிர்லா பவனில் நாதுராம் கோட்சே சுட்டபோது, மார்பில் குண்டு பாய்ந்து சரிந்தபடி, மகாத்மா காந்தி சொன்னது, இவற்றில் எந்த வார்த்தை என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
நாதுராம் சுட்டபோது, "ஹே ராம்' என்று சொல்லி ரத்த வெள்ளத்தில் காந்தி சரிந்தார் என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது ( ?) . சமீபத்தில், காந்தி பற்றிய வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில், அவர் "ராம்...ராம்' என்று தான் சொன்னார் என்று எழுதப்பட்டுள்ளது ( ?) . இதையடுத்து, இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.


காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் கல்யாணம்; வயது 84. சென்னையில் இவர் வசித்து வருகிறார். காந்தி சுடப்பட்டபோது, அவருக்கு பின்னால் கல்யாணம் நின்றிருந்தார்.
காந்தியை சுட்டபோது , அந்த இடத்தில் நடந்த விஷயங்கள் குறித்து கல்யாணம் கூறியதாவது:காந்தியின் இரு பக்கத்திலும், வழக்கம் போல, மனு மற்றும் அபா காந்தி உடன் வந்தனர். அவருக்கு பின்னால், இடதுபக்கம், அவருக்கு அருகில் நான் வந்து கொண்டிருந்தேன். காந்தியை நாதுராம் , துப்பாக்கியால் அடுத்தடுத்து சுட்டான். மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காந்தியால் பேச முடியவில்லை. அவர் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. அவரை பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தான், "ஹே ராம்' என்று கத்தியிருக்க வேண்டும். ஆனால், காந்தி வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. நாதுராம் கோட்சே, துப்பாக்கியை நீட்டியபடி காந்திக்கு முன்னால் வெகு அருகில் நின்று நேரடியாக அவர் மார்பில் சுட்டார். காந்தி மார்பில் குண்டுகள் பாய்ந்தன. அவர் இடது பக்கம் நின்று சுட்டிருந்தால், காந்தியை துளைத்த குண்டுகள், என்னையும் துளைத்து நானும் இறந்திருப்பேன்.
பிர்லா அரங்கில், வழக்கமான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளுடன் வெளியே வந்தார் காந்தி. அரங்கின் வெளியே வளாகத்தில், அவரை பார்க்க 200 பேர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவராக கோட்சே இருந்தார். காந்திக்கு பணிவது போல தலையை குனிந்து, அடுத்த தொடியே, காந்தியை நோக்கி சுட்டார்.ஆனால், காந்தி கொலை தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், அவர் அருகே இருந்த யாரையும் அழைத்து பேச அக்கறை காட்டவே இல்லை. காந்தி சுடப்பட்ட நாளில் இருந்து ,இன்று வரை, யாரை பார்த்தாலும், இந்த விஷயம் குறித்து பேச்சு வந்தால், "காந்தி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை' என்பதை சொல்லி வருகிறேன். ஆனால், இது பற்றி தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.
நான் சொன்னதை யாரும் கேட்பதாக இல்லை. தன் தாத்தாவை துஷார் காந்தி பார்த்தது கூட இல்லை. அப்படியிருக்க, காந்தி சுட்டுக்கொல்லப்படும் தறுவாயில், ஹே ராம் என்று சொன்னார் என்று எப்படி சொல்ல முடியும்? "நான் இறக்கும் தறுவாயில் ராமபிரான் பெயரைச் சொல்லி இறக்க வேண்டும்' என்று காந்தி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்படும் போது ராமபிரான் பெயரை சொல்லவில்லை. துப்பாக்கி குண்டுகள், மார்பை துளைக்கும் போது, அவர் எந்த வார்த்தையையும் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தார்.இவ்வாறு கல்யாணம் கூறினார்.




கொன்னவங்க எந்த கூட்டம்னு யோசிக்காம செத்தப்போ என்ன சொல்லிகிட்டு செத்தருன்னு இன்னும் சண்டை போடுரீங்களேப்பா ................

No comments: