Saturday, May 24, 2008

எட்டப்பன் ஆகிடுங்க கெட்டப்ப மாத்திடுங்க - அமெரிக்காவின் புதிய அதிரடி


விலைவாசியை சமாளிக்கணுமா? காட்டிக்கொடுக்க கைகொடுக்குது புது வழி
நியூயார்க் : விலைவாசியை சமாளிக்க முடியலியா, கரன்ட் பில், போன் பில் கட்ட பணமில்லையா, கவலையே வேண்டாம்! காட்டிக்கொடுத்தால் போதும்; கைநிறைய காசு ஓசைப்படாமல் வங்கிக்கணக்கில் சேரும்!-
அமெரிக்கர்களுக்கு இப்படி ஒரு புதுமையான வழி தான் இப்போது கைகொடுக்கிறது.குற்றங்களை தடுக்க அமெரிக்க போலீஸ் துறை பல வழிகளை கையாள்கிறது. அதில் ஒன்று, "கிரைம் டிப்ஸ்டர்ஸ் ஹாட் லைன்' திட்டம்.

குற்றவாளி பற்றி துப்பு கிடைத் தால், குற்றம் நடப்பதை அறிந்தால், இந்த போன் எண்ணில் தகவலை பதிவு செய்து பெயர், முகவரியையும் அளிக்க வேண்டும்.தகவலின் படி, போலீசார் விசாரித்து குற்றவாளியை பிடித்தாலோ, குற்றத்தை தடுத்தா லோ, உங்கள் வங்கிக்கணக்கில் வெகுமதி தொகை சேர்க்கப்பட்டு விடும். குற்றவாளிகளை காட்டிக்கொடுப் போரை பாதுகாக்க இப்படி வெகு ரகசிய வழியை அமெரிக்க போலீஸ் கடைபிடித்து வருகிறது.வழக்கமாக இந்த போன் எண்ணுக்கு குறைவாக தான் அழைப்பு வரும். ஆனால், கடந்த ஆறு மாதமாக அதிக அளவில் போன் அழைப்புகள் வருகின்றன. குற்றவாளிகளை பற்றி , குற்றத்தை அறிந்தது பற்றி தகவல் அளித்து பணம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், போலீசுக்கு தலைவலி தந்து வந்த பல முக்கிய குற்றங்களில் கூட துப்பு கிடைத்து வருகிறது.

திடீரென "காட்டிக்கொடுப்போர்' எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் பற்றி அதிகாரிகள் கூறுகையில்,"விலைவாசி பல மடங்கு அதிகரித்து விட்டது. சாதாரண சம்பளம் பெறுவோர், குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அதனால்தான், போன் செய்து குற்றம் சம்பந்தப்பட்ட தகவல்களை அளிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை, பல இடங்களில் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்ற திருப்தி இருக்கிறது' என்றனர். குற்றம் தொடர்பான தகவலுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை வெகுமதி தரப்படுகிறது. முக்கிய குற்றவாளி பிடிபட காரணமான தகவல் என்றால், அதற்கு கூடுதல் வெகுமதி தரப்படுகிறது.

Monday, May 19, 2008

இஸ்லாமியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாட தடையா ?

இந்த சுதந்திர இந்தியாவில் இன்றைய கால சூழலில் இஸ்லாமியர்கள் பலவாறாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப் படுவதும் இனக்கலவரங்களின் மூலம் கூட்டம் கூடமாக அழித்து ஒழிக்கப் படுவதும் இன்று அன்றாடம் வாடிக்கை ஆகிவிட்ட சூலில் இந்த இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிர வாதிகள் என்று ஒரு போலியான வாதம் உளவியல் ரீதியாக மக்கள் மனதில் பதிக்கப் படுகிறது.ஆனால் இந்த இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு செய்த தியாகங்கள் ஏராளம் ஏராளம்.ஆனால் காந்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு படுகொலை செய்த கூட்டங்கள் இன்று அந்த தியாகங்களை அப்படியே அநியாயமாக திருடி சென்று விட முயற்சிக்கின்றனர். இன்னும் இந்த துரோகிகள் இவர்களை தியாகி களாக காட்டவும் முயற்சிகின்றனர். அதன் வெளிப் பாடு தான் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி.இது இன்று முத்திப் போய் இஸ்லாமியர்களின் தியாகங்கள் எங்கே வெளிப் பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர்களின் எல்லா முயற்சிகளையும் முறியடிக்க இவர்கள் காட்டும் ஆர்வம் உண்மைப் படுத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரத்தை அதன் சொந்தக் காரர்களை கண்ணியப் படுத்தும் விதமாக அந்த தினத்தன்று அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஓட்டுவது தேசிய கோடி ஏற்றுவது அணிவகுப்புகளை நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவது வழக்கம்.இது உலக நடப்புகளை அறியும் ஆர்வம் உடைய பகுத்தறிவாளர்கள் அறிந்த ஒன்று தான்.
இன்று இதற்க்காக நடத்தப் படும் ஒத்திகைகள் சில வேலை வெட்டி இல்லாத போலிகளின் விளையாட்டு தனத்தால் இரகசிய தகவல்கள் என்ற பெயரில் யூகங்களையும் வதந்திகளையும் பரப்பும் பொருட்டு காவல துறைக்கு அளிக்கப் படுகிறது.கிடைத்த தகவலை சரி பார்க்க வேண்டி அவர்களும் இந்த அலை களிப்புக்கு ஆளாவது தவிர்க்க முடியாதா ஒன்றாகி விட்டது .
உதாரணமாக



பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சியா? மேலப்பாளையத்தில் போலீசார் கண்காணிப்பு



திருநெல்வேலி : மேலப்பாளையம் பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலால், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார். ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, சென்னையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நெல்லையைச் சேர்ந்த ஹீரா (26) என்பவர் உட்பட மூன்று தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்களது கூட்டாளிகளான தஞ்சை அதிராமபட்டினம் தவுபீக், சென்னை அபுதாகீர் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் தேடப்படும் தீவிரவாதிகள் கேரளா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நெல்லை சரக டி.ஐ.ஜி., கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., தினகரன் மேற்பார்வையில் நெல்லை மாவட்டம் முழுதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.


இந்நிலையில், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகிகளை போலீசார் அழைத்து விசாரித்தனர். "சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்கான பயிற்சி தான் அளிக்கிறோம், வேறு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த ஒத்திகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும், இளைஞர்கள் கலந்து கொண்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று காலை இளைஞர்களுக்கான அணிவகுப்பு பயிற்சி நடத்தப்பட இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளியில் அணிவகுப்பு பயிற்சி நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் பயிற்சி ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் விளையாட்டு பயிற்சிக்காக பலர் பள்ளி மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.


நன்றி : தினமலர்


இந்த செய்தியில்
பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது
என்று அவர்களே ஒத்துக்க் கொண்ட பிறக்கும் இதனை ஒரு பெரிய சதி செயலைப் போல போலியாக திரித்து கூறுவது இவர்களின் காவல்துறையின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கையே தெரிவிக்கிறது.

இதில் பரிதாபத்திற்குரிய நிலை துறைக்கு தான்.இன்றைய கால சூழலில் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களை காப்பாற்றி வரும் இவர்களின் தியாகங்கள் பல பல. ஆனால் இத்தகைய போலி களின் திசை திருப்பும் நோக்கிற்கு இரையாவதன் மூலம் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.
எனவே இனி வரு காலங்களில் கண்ணியத்திற்குரிய காவல் துறை இது போல இடையூறு செய்யும் வேலை வெட்டி இல்லாத போலி களை இனம் கண்டு பகிரங்கமாக தண்டிக்கவேண்டும்.அதன் மூலம் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று உண்மையான பாசத்தோடு கோரிக்கை வைக்கிறேன்.பத்திரிகைகளும் இது போன்ற ஒன்றுக்கும் உதவாத வீணான விசயங்களை பிரசுரித்து இத்தகைய போலிகளை ஊக்குவித்து தங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்வதை விட்டு விட்டு அந்த இடங்களில் மக்களுக்கு உதவும் எதாவது தகவல் களை அதிகமாக பிரசுரிப்பத்தின் மூலம் நாங்கள் கொடுக்கு காசுக்கு உண்மையான உறுதியான தகவல் களை தந்ததிருப்தியை யாவது எங்களுக்கு தர முயற்சிக்கலாம்.வாசகர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பத்திரிகை கள் இனி வரும் காலங்களில் இதனை செயல் படுத்தும் என்று நம்பிக்கை கொள்கிறோம் .

அன்புடன் : இறை அடிமை

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பதெப்படி?

பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை.

மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).

ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.

இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.

இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும். இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.

கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.

பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.

அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.

குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?

ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.

வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.

கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.

அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?

சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?

5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?

மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.

ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.

பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?

செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?

காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!

மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?

வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.

"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com

Sunday, May 18, 2008

ஜட்டி போட்டவன் காணிக்கையை எண்ணக் கூடாதுடா ! எண்ணக் கூடாதுடா !எண்ணக் கூடாதுடா !

காணிக்கைகளை எண்ணும்போது உள்ளாடை அணிய தடை விதிப்பதா?- சபரிமலை தேவசம்போர்டிற்கு கண்டனம்

சபரிமலையில் ஒவ்வொரு சீசனின்போதும் உண்டியல் உடைக்கப்பட்டு எண்ணும் பணியில் தேவசம்போர்டு ஊழியர்கள் இந்த ஈடுபடுவார்கள்.

உண்டியல் எண்ணும் நபர்கள் உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டை தேவசம்போர்டு நிர்வாகம் விதித்துள்ளது.உண்டியல் எண்ணும் நபர்கள் எதையாவது திருடிவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த கட்டுப்பாடு.இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷனில் தேவசம்போர்டு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் புகார் செய்தார்.

தேவசம்போர்டு விதித்த உள்ளாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தோடு, கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என விசாரணை நடத்திய மனித உரிமை கமிஷன் உத்தர விட்டுள்ளது.

நன்றி : அந்திமழை


நாட்டாம தீர் ர் ர் ர் ர் ர்ப்ப மாத்தி சொல்லு !