Friday, February 8, 2008

அடத் தூ ........................................

படன், குஜராத் :குஜராத் மாநிலம் படானில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சி கல்லுõரியில், தலித் மாணவியை ஆசிரியர்கள் பலர், பல முறை கற்பழித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த ஆசிரியரில் ஒருவர் நல்லாசிரியர் விருது பெற்றது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.


படானில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் செக்ஸ் சில்மிஷங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறைகளிலேயே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷங்கள் செய்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அருவெறுப்பான வகையில் ஜோக் சொல்வது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றி வெளியில் சொன்னால், மாணவிகளின் செயல்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று மிரட்டி வந்துள்ளனர். தலித் மாணவி ஒருவர் பல ஆசிரியர்களால், பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஆசிரியர்களின் கொடுமை தாங்காமல், இது குறித்து அந்த மாணவி புகார் செய்ததும் தான், அந்த கல்லுõரியின் ஆசிரியர்களின் செக்ஸ் வெறி அம்பலத்துக்கு வந்தது.
கடந்த இரு மாதங்களில் தலித் மாணவியை 14 முறை கற்பழித்ததாக, ஆசிரியர் டாக்டர் அதுல் என்பவர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இவருக்கு அரசின் "நல்லாசிரியர்' விருது வழங்கப்பட்டுள்ள விவரம் தற்போது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாநில அரசின், "நல்லாசிரியர்' விருது பெற்ற டாக்டர் அதுல், பாதிக்கப்பட்ட தலித் மாணவி மட்டுமின்றி, பல மாணவிகளின் கற்பையும் சூறையாடியவர். இவர் மாநில வருவாய் துறை அமைச்சர் ஆனந்திபென் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், கல்லுõரி வளாகத்தில் நியாயம் கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.



நன்றி : தினமலர்



ஆயிரக் கணக்கில் தன் சொந்த குடிமக்களையே கொலை செய்தும் அந்த கொலைகளை நியாயப் படுத்தியும் இன்னும் அந்த கொலைகளை செய்ததும் அதற்கு பின்புலமாய் இருப்பதும் நான் தான் என அறிந்தும் என்னை கைது செய்யத் தயங்குவது ஏன் என்று மிரட்டும் தொனியில் மத்திய அரசையே மிரட்டும் அளவு அதிகாரம் கொண்ட (?)ஒரு முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் இது ஒரு சாதாரண விசயமே.இன்னும் இது போன்ற நாசக் காரர் களுக்கு பாரத ரத்னா கொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.வேண்டுமானால் இந்த விஷயத்தில் மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இனி கொடுக்கப் பட இருக்கும் விருதுகளை எதிர்ப் பார்த்து காத்திருக்கலாம்.காரணம் அவர்கள் ஒரு ஏழை தலித் சகோதரியை கற்பழித்ததன் மூலம் இந்த பாசிஸ்டுகளின் அடிவரை வருடி ஒருமுறை ஆனந்த மளித்து இருக்கிறார்கள் அல்லவா?

No comments: