Thursday, March 13, 2008

நுகர்வோர் தினமும் பட்டினிச் சாவுகளும்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மார்ச் 15 - நுகர்வோர் தினம்நுகர்வோர் தினமும் பட்டினிச் சாவுகளும்

மனிதன் தன் வேலைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு காலம் இருந்தது. அது வரலாறுகளில் கற்காலம் என்றழைக்கப்படுகிறது. வாழ்வாதாரத்திற்கான உணவை அவன் வேட்டையாடித்தான் பெற்றுக்கொண்டான். எனவே உணவின் பற்றாக்குறை ஏற்படும்போது அது கிடைக்கும் இடம் தேடி இடம் பெயர்ந்தான்.இடம் பெயர்தலால் ஏற்படும் கஷ்டங்களும், புதிய தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் இழப்புகளும் அவனைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு உணவைப் பெறுவது பற்றி யோசித்தான். பயிர்செய்யும் தொழில் கற்றான். பயிர் செய்த தானியங்களில் எஞ்சியதைப் பிறருக்குத் தந்து, அவர் பெற்றமகசூலை வாங்கி வந்தான்.

வியாபாரம் பிறந்தது. இந்த வியாபாரத்தை இலாப நோக்கில் செய்ய எண்ணினான். உற்பத்தியை அதிகரிக்க உபகரணங்களை வேண்டும். உபகரணங்களை உருவாக்கத் தலைப்பட்டான். தொழிற்புரட்சி முகிழ்ந்தது.தொழிற்புரட்சி யோ எண்ணியதை விட ஏகபோக உற்பத்தியை வழங்கியது. உற்பத்தியானதை விற்றாக வேண்டும். விற்றுத் தீர்ப்பதற்கு உள்நாட்டுச் சந்தை போதாது. உலகளவில் சிந்தித்தான். உலகமயமாக்கல் ஏற்பட்டது. மனிதன் வாழ வேண் டுமானால் வாங்கியே ஆக வேண்டும் எனும் கோட்பாடு மனிதன் மீது திணிக்கப்பட்டது. அவ்வாறு வாங்கும் பொருட்களில், மனிதன் ஏமாற்றப் பட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையில் உதயமானதே நுகர்வேர் தினம்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வாங்கும் திறனைக் கொண்டு அளவிடப்படும் அளவுக்கு, சந்தைப் பொருளாதாரம் நாட்டின் அச்சாணியாகத் திகழ்கிறது. இதில் உற்பத்தியாளர் களும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து பளபளப்பான விளம்பரங்கள் மூலம் சுலபமாக அதிக லாபத்திற்கு விற்று விடுகின்றனர். நுகர்வோர் எதனை வாங்க வேண்டும் என்பதை பொருளின் தரம் நிச்சயிப்பதை விட விளம்பரங்களே அதிகம் நிச்சயிக்கின்றன. இதில் அதிகம் வஞ்சிக்கப்படுபவர்கள் குழந்தைககள் தான். 2005ம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கான மிட்டாய் விளம்பரங்களில் மட்டும் 4250 கோடி ரூபாகள் முதலீடு செளிணியப்பட்டுளது எனஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஒரே தரமுடைய பொருட்கள், கண்கவர் பாக்கட்களில் அடைக்கப்பட்டு, நன்கு அறிமுகமான நிறுவனத்தின் பெயரால் விற்பனைக்கு விடப்பட்டால் அது அதிக விலையாக இருந்தாலும் 73% பேர் அதனை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் அதே பொருட்கள் வெள்ளை பாக்கட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் வெறும் 13% மக்ககள் மட்டுமே வாங்குகின்றனர் என மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

தெருக்களில் திறந்த நிலையில் விற்கப்படும் தின் பண்டங்களை குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தருவது இல்லை. காரணம் அவை ஆரோக்கியம் அற்றவை என்பதால். ஆனால் அதே நேரம் மதிமயக்கும் விளம்பரங்களுடன் பரத்தி வைக்கப்படும் உடல்நலனைப் பாதிக்கும் உணவுப் பண்டங்களை அதிக விலைகொடுத்து வாங்கித் தருகின்றோம். குழந்தைகளும் அதனையே அதிகம் விரும்பி உண்கின்றனர். இதுபோன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுககள் மனிதனின் ஆரோக் கியத்தைச் சீரழிப்பதில் பெரும் பங்குவகிக்கின்றன. பெருகி வரும் ஃபாஸ்ட் ஃபுட்கள் யதார்த்தத்தில் அதிக சுவை உடையதாகவும்,நாகரிகமானதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமையலாம். ஆனால் அவைகளால் ஏற்படும் பின் விளைவுகளை பலர் சிந்திப்பதில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் முன்னேற்றம் மனிதனை இருந்த இடத்தைவிட்டு எழ விடாமல் செய்து விட்டது. அதிலும் இவை போன்ற கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடல் பருமன் (Obesity) ஏற்படுகின்றது.

உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் உலக அளவில் ஒருவித பொருளாதார ஏற்றத்தாழ்வைத்தான் ஏற்படுத்தியுள்ளது . அதிகப்படியான வருமானம் அதிக நுகர்வை ஏற்படுத்தி அதனால் உடல் பருமனால்அவதியுறும் அதேவேளை, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி பட்டினிச் சாவுகளையும் நாம் இப்பொழுது பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலாளிகள் என்று வீர முழக்கம் செய்யும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் கண் ஜாடை அசைவுகளுக்கு ஒப்ப நடக்கவில்லை என்ற காரணத்திற்காக பிற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து எண்ணற்ற மனித உயிர்களைக் கொன்று குவிக்கின்றன.நுகர்வேர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து தகுதியும் வசதியும் இருந்தும் எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாமல் முடமாக்கப்பட்டிருக்கும் சிலரையும் சேர்த்து நினைவு கூர்வதே இந்நாள் கொண்டாடப் படுவதன் நோக்கத்தை நிறைவு செய்வதாக அமையும். வளம் மிக்க ஈராக்கின் அனைத்து எண்ணை வளத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்தற்காக, பொய் காரணங்கள் கூறி அந்த நாட்டின் மீது படையெடுத்தது அமெரிக்கா. அத்தோடு ஈராக்கை சல்லடையாக்கியது. இன்று நடைபிணங்களாக அம்மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு யார் இழப்பீடு தருவது? ஃபலஸ்தீனர்கள் இன்றுசொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. ஒரு நேரத்திற்கு மட்டும் போதுமான ரொட்டித்துண்டை உண்டு வறுமையில் வாடுகின்றான் ஃபலஸ்தீனக் குடிமகன். அவனுக்கு யார் இழப்பீடு தருவது?சொந்த மாநிலத்திலேயே சொந்தங் களையும், சொத்துகளையும் இழந்து அகதிகள்முகாமில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள் குஜராத் மக்கள். அவர்களுக்கு யார் இழப்பீடு தருவது?

மார்ச் 2008 விடியல் வெள்ளியில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.

வெளியீடு:
Gulf Social Forum (GSF)

Sunday, March 9, 2008

குஜராத்துக்குள் இந்தியா இல்லை!

மகாத்மா காந்தியின் எழுத்துக்களும், பேச்சுக்களும், அவரது படைப்புகளும், நூறு தொகுதியாக வெளிவந்துள்ளன. சுமார் 50 ஆயிரம் பக்கங்களில், அவரின் எண்ணங்கள் இந்த தேசத்தைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. தனது 18 வயதிலிருந்து கொல்லப்படும் வரை 30 ஆயிரம் கடிதங்களை எழுதியுள்ளார். அவரது மொத்தப் படைப்புகளின் சாராம்சத்தையும் ஆய்வு செய்த அறிஞர் அனந்தராமன் ஆச்சிரியமான தகவலைக் குறிப்பிடுகிறார். காந்தியின் படைப்புகளில் எந்தவொரு பக்கத்திலும் மதச்சார்பின்மை என்ற வார்த்தையே கிடையாது.

இருப்பினும் காந்தி வாழ்ந்த போதும், மறைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் மதவெறியர்களுக்கு அச்சமூட்டுபவராக, அதிர்ச்சி அளிப்பவராக இருந்து கொண்டே இருக்கிறார். அதனால்தான் காந்தி மறைந்த தினத்தை இன்றும் கூட வகுப்பு வெறியர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ். கொலை வெறியனால், கொல்லப்பட்டு 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தாண்டு அவர்களுக்கு இரட்டை சந்தோசம்.ஒன்று குஜராத்தில் கொலை வெறியன் மோடி வென்றது, இரண்டாவது அத்வானி பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய்க்கு ‘பாரத் ரத்னா’ விருது கேட்டதும் கூட அவர் மீதுள்ள பாசத்தால் அல்ல. வாஜ்பாய்க்கு ஓய்வு கொடுத்து அவரை வீட்டில் முடக்க நடந்த ஏற்பாடு ஒருபுறம், மற்றொரு புறம் மோடியை குஜராத்துக்குள் இருக்க வைப்பதற்கான ஏற்பாடும் ஒளிந்துள்ளது. எப்படி எனில், குஜராதின் வெற்றி மோடியை இங்கே தேசத் தலைவராகத் தன் கட்சிக்குள் உயர்த்திவிடுமோ என்ற அச்சம் தான் ராஜ்நாத் சிங்கால் உடனடியாக அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவைத்தது.

சமீபத்தில் நடந்த பா.ஜ.க. தேசியக் குழுக் கூட்டத்தில் குஜராத்தின் வெற்றி போதையாக மாறி, காவிக் கூட்டத்தின் தலைக்கு ஏறியது நன்றாகத் தெரிந்தது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமிய மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் கொடுத்திருக்கிற எல்லா சலுகைகளையும் வாபஸ் பெறுவோம் என அறிவித்ததிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்தும், தற்போதுதான் சர்ச்சார் கமிஷன் மூலமாக சிறுபான்மை மக்களுக்கு ஏதோ சலுகைகள் கிடைப்பதற்கான வெளிச்சம் தெரிந்தது. இதைக் கூட காவிக் கூட்டத்தால் பொறுத்துக் கொள்ளமுடியாத குரோதத்தின் வெளிப்பாடுதான் இது.

அடுத்த பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்ததால், பாரதிய ஜனதா கட்சி இந்த தேசத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பல்லாண்டுகாலம் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைச் சின்னமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தடைமட்டம் ஆக்குவதில் அடித்தளமாய் இருந்த அத்வானியை, அதற்கு முன்னால் ரதயாத்திரை என்ற பெயரில் இந்த தேசம் முழுவதும் கலவரத்தை உண்டாக்கி, படுகொலைகளுக்குக் காரணமான ஒரு மனிதனை நாங்கள் நிறுத்துகிறோம். முடிந்தால் எதிர்த்துப் பாருங்கள் என்கிற சவால்தான் அது.

இந்த தேசத்தின் மிகப்பெரிய சோகம், இடதுசாரிகளைத் தவிர வேறு எந்தவொரு கட்சியும் இந்த சவாலை அதன் முழு அர்த்தத்தோடு எதிர்கொள்ளும் உணர்வோடு இருப்பதில்லை. பல கட்சிகள் பதவிக்கும், பணத்திற்கும் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருப்பது தான் வேதனை. இந்த நாட்டின் மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மென்மையான அணுகுமுறையே கைகொண்டு வருகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தெகல்காவை பயன்படுத்தாதே. அப்பட்டமாய் கொலையாளிகளின் முகம் கிடைத்தும் கூட எந்தவொரு சிறு துரும்பைக் கூட ஆசைக்க திராணியற்று அம்பலப்பட்டு நின்றார்கள்.

ஆனால், பா.ஜ.க. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராய் அறிவித்ததன் மூலம் அடுத்த ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஏனென்றால் இந்தியா என்பது குஜராத்திற்குள் இல்லை. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன.

ஆசிரியர் குழு

Thanks: keetru.com


முகமது நபி கேலிச் சித்திரம்: ஆப்கானில் ஆர்ப்பாட்டம்


டென்மாக் நாட்டுப் பத்திரிகைகளில் இறைதூதர் முகமது அவர்களின் கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டதைக் கண்டித்து, ஆப்கானின் மேற்கு நகரான ஹெராத்தில் பெருமளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், டச்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், குரானை விமர்சித்து, ஒரு திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


அந்த நாடுகளின் தேசியக் கொடிகளை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ நாடுகளின் படையிலிருந்து அந்நாட்டுப் படைகளை விலக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

Thanks:Bbctamil