Wednesday, February 6, 2008

மதி கெட்ட மத வெறியர்களால் தாக்கப்பட்ட அரசு ஊழியர்கள்

கன்னியா குமரி மாவட்டம் வேரி கிளம்பி அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கோவிலை அகற்றி பாதை அமைக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் (?) பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருந்தனர் .அப்போது சிலர் அவர்களோடு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இது நடந்துகொண்டு இருக்கும் போதே அர்ச்சுனன் என்பவன் அவர்களை கொலை செய்யும் நோக்கில் காரை ஒட்டி வந்து அவர்களின் மீது மோதினான்.இதில் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அந்தோனி சேவியர், ஜூனியர் இன்ஜினீயர் சுந்தரம் போலிஸ் ஏட்டு எட்வின் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இது தொடர்பாக அவர்களை கொலை செய்யும் நோக்கில் கரைக் கொண்டு மோதிய அர்ச்சுனன் என்பவனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர்.


இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் இனி இந்த நாட்டில் இவர்களை தவிர வேற யாரையும் வாழ விட கூடாது என்னும் முடிவின் உச்ச கட்டத்தில் இவர்கள் செயல் படுவது அறிவுடயவர்களுக்கு புரியாமல் இல்லை.இது போன்ற மூர்க்க தனமான மத வெறியர்களிடம் இருந்து இந்த நாடு கப்பட்டப் படாத வரை நம்மால் வல்லரசு ஆகமுடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

No comments: