Monday, August 4, 2008



பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் வெடிகுண்டுகளால் அதிர்ந்த அடுத்த கணமே, ஷேக் அப்துல் கபூர், ஹீரா ஆகியோரைக் கைது செய்து `தீவிரவாதிகளிடம் இருந்து சென்னை நகரைக் காப்பாற்றி விட்டோம்' என்று தமிழகக் காவல்துறை மார்தட்டிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் மூவ்மெண்ட்களை தொடர்ந்து கவனித்து அவர்கள் மீது பொதுநல வழக்குகளை ஏவி வருபவர், டிராஃபிக் ராமசாமி. வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் பொதுநல வழக்குப் போட்டு கேள்வி கேட்டுவிடுகிறார். தள்ளாத வயதிலும் தளராமல்போராடும் இவர் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அப்படியும் ஜாமீனில் வெளியே வந்ததும் புதுத் தெம்புடன் கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு நீதிமன்றப் படிகளை ஏறத் தொடங்கிவிட்டார். தீவிரவாதிகளைக் கைது செய்து சென்னையை ஆபத்திலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்தும் பொரிந்து தள்ளிவிட்டார்.
``இரு நகரங்களிலும் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கைகூட விடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் பிரச்னைக்குப் பிறகு வருவோம். முதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பத்துக் கொலைகளுக்கு மேல் நடந்துவிட்டன. அதில் தொடர்புடைய ஒருவரைக் கூட போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி தினமும் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு என்ற பெயரில் கொலு பொம்மைகளைப் போல் போலீஸாரை நிறுத்தி வைக்கிறார்கள். காவலாளிகளைக் குறிவைத்து ஒரு மர்ம மனிதன் கொலை செய்துகொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்க இவர்களால் முடியவில்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் ரோட்டில் திரிந்து கொண்டிருந்த அப்பாவி மனநோயாளிகளைப் பிடித்து சித்திரவதை செய்கிறது காவல்துறை. அந்தக் கொலைகள் நடந்த வடபழனி பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஐநூறு போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் கமிஷனர் சேகர் சொல்கிறார். உண்மையில் காவல் நிலையங்களில் இருக்க வேண்டிய அதிகாரிகள் கூட முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். பிறகு எங்கிருந்து ஐநூறு போலீஸார் வடபழனிக்குச் சென்றார்கள்? தி.மு.க. அனுதாபியான கமிஷனர் சேகரின் திறமையின்மையால் சென்னையில் சட்டம்_ஒழுங்கு பாதித்துவிட்டது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்.
சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக (1998) சேகர் இருந்த போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் அலட்சியம் காட்டியதைக் கண்டித்து அவர் மீது பொதுநல வழக்குப் போட்டேன். அந்த விவகாரத்தில் அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். இப்போது கமிஷனராக சென்னைக்கு வந்ததும் என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆறு ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு உள்ளனர். அதிலும், கைவைத்துவிட்ட கமிஷனர், எனது பாதுகாப்பு போலீஸ்காரர்களுக்கு வழங்கியிருந்த கார்பன் கன்களைப் பறித்துவிட்டு, சாதாரண 410ரக மஸ்கட் துப்பாக்கியை வழங்கியிருக்கிறார். கமிஷனரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இவரது (கமிஷனர்) தூண்டுதலின் பேரில், எனது பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் தாக்கி என்னைக் கொல்ல முயன்றார். அதுதொடர்பாகவும், கமிஷனர் மீதே போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.
`அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்கலாம்' என்று ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசின் உளவுப் பிரிவு தமிழக போலீஸாரை எச்சரித்திருந்தது. அப்போது, அலட்சியமாக இருந்துவிட்டு, பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்ததும் கமிஷனர் சேகர் சுறுசுறுப்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். நெல்லையிலும், சென்னையிலும் பதுங்கி இருந்ததாகக் கூறி, இரண்டு பேரை இப்போது கைது செய்திருக்கிறார்கள். அதிலும் ஒருவர் சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர். சுதந்திர தினத்தன்று அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட இடங்களைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது வழக்குப் போட்டுள்ளார்கள். அந்த நபர், சிறையில் இருந்து வெளியே வந்தபோதே கண்காணித்திருந்தால் பெங்களூர், அகமதாபாத் சம்பவங்களுக்கு முன்பே கைது செய்திருக்கலாமே?
`அந்த இருவரும் பதுங்கியிருந்தார்கள்' என்கிறது போலீஸ். ஆனால், போலீஸாரால் கைது செய்யும் வரை அவர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். உண்மையான தீவிரவாதிகளைத் தப்பவிட்டுவிட்டு இந்த இருவரையும் கைது செய்திருக்கலாம் என்பதே என் யூகம். தி.மு.க. அரசுக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் யாரோ இருவரைக் கைது செய்து கணக்குக் காட்டியிருக்கிறார் கமிஷனர் சேகர்.
சென்னையில் வெடிகுண்டுகள் வைக்க, புழல் சிறையிலேயே திட்டம் உருவானதாக போலீஸார் கூறுகின்றனர். அதை நிரூபிக்க கைதிகளிடமிருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். கைதிகளிடம் திடீரென செல்போன் வந்தது எப்படி? இத்தனை நாட்களாக அவர்கள் செல்போன் வைத்திருந்தது போலீஸுக்குத் தெரியாதா? தண்டனைக் கைதிகளில் பெரும்பாலானோர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தடை செய்யப்பட்ட சிம்கார்டு உள்ளிட்ட பொருள்களை சிறைக்குள் கொண்டு செல்வதில் பல நேரங்களில் காவல்துறையினரே உதவியாக இருக்கின்றனர். சிறையில் உள்ள பயங்கரவாதி அலி அப்துல்லாவை, ஜாமீனில் வெளியே வந்த ஹீரா பலமுறை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பை அப்போதே கண்காணித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுகாவல் துறையின் அலட்சியம்தானே? தங்களைவிட காவல் துறையினருக்குக் கூடுதல் அதிகாரம் இருப்பதால், கைதிகளை சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
அந்த இரண்டு பேரைக் கைது செய்துவிட்டு, தற்போது வெறும் கண்துடைப்புக்காக சாலையில் போவோர், வருவோரையும் நிறுத்தி சோதனை என்ற பெயரில் இவர்கள் செய்யும் தொந்தரவுக்கு அளவே இல்லை. வாகனச் சோதனை என்ற பெயரில், பொதுமக்களை மிரட்டி, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்கின்றனர்.
இங்கு யார் யாரெல்லாம் தீவிரவாதிகள்? எங்கெல்லாம் வெடிகுண்டுகள் தயாரிக்கிறார்கள்? என்று காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். சொந்த லாபத்துக்காகவே அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பிரச்னை வரும்போது மட்டும் `நெக் ஆஃப் தி மூவ்மெண்ட்'டில் தீவிரவாதிகள் என்று ஒருசிலரைக் கைது செய்கின்றனர். அவர்களுடன் இருப்பவர்களுக்கும் தீவிரவாத முத்திரை குத்துவதும் நம்மூர் போலீஸாரின் வழக்கமான பாணிதான். தீவிரவாதிகள் உருவாவதில்லை; அவர்களை உருவாக்குவதே போலீஸ்தான் என்பது இந்த முறையும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தார் டிராஃபிக் ராமசாமி.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்



இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது ‘கஸ்வா’ ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, ‘பத்னுல்வாதி’ எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே “நபியவர்களின் இறுதிப் பேருரை” என்பதாக இன்று அறியப்படுகிறது.
கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு

… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்

!ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!

ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
அராஜகம் செய்யாதீர்கள்!அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.
நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
மறுமைக்கு அஞ்சுவீர்!ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!

ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்!மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!

(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?’‘ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)’‘ (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)


நன்றி : ஜாகிர்

Saturday, August 2, 2008

கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!

அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?


கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி



அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கைதான தீவிரவாதி ஹீரா தெரிவித்தார்.

நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது தீவிரவாதி ஹீரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
பழக்கம் ஏற்பட்டது எப்படி

இறைவன் ஒருவனே என்ற அமைப்பில் முன்பு இருந்தேன். அப்போது பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை. குண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை என்மீது போட்டு சிறையில் அடைத்தனர். சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லாவும், நானும் ஒரே செல்லில் இருந்தோம். அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

ரத்ததானம்

கடந்த 21&ந் தேதி நிபந்தனை ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். மண்ணடியில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தேன். நெல்லை போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்து இந்த வழக்கில் சேர்த்து விட் டனர்.

நாட்டுப்பற்று அதிகம் உடையவன் நான். 15 முறை ரத்ததானம் செய்து உள்ளேன். என்னை தீவிரவாதி என்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனக்கு மனம் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு ஹீரா கூறினார்.

அப்துல் கபூர்
நெல்லை கோர்ட்டுக்கு வந்த அப்துல் கபூர் கூறியதாவது:

எனக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சென்னையில் செருப்பு கடையில் நான் வேலை செய்தபோது ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் ஹீராவுடன் பழகி வந்தேன். காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் கிளையின் ஒரு அமைப்பின் (தவ்ஹீத் ஜமாத்) செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது பேட்டை பள்ளிவாசலில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

நான் என்னுடைய அமைப்பு அல்லாமல் மற்றொரு அமைப்பை (சுன்னத்துல் ஜமாத்) ஆதரித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த என்னுடைய அமைப்பினர் என்னை போலீசில் சிக்க வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னை போலீசார் கைது செய்தனர். எனக்கு டைம் பாம் செய்ய தெரியாது.
இவ்வாறு அப்துல் கபூர் கூறினார்.

நன்றி : தினத் தந்தி

குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம் காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின் சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன் தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.
நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும்.
இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்.


கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான் குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் யா முஹைதீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி : WWW.EASTADIRAI.BLOGSPOT.COM

ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....


தவ்ஹீத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்என் கணவரை சிக்க வைத்து விட்டனர்* ஷேக் அப்துல் கபூரின் மனைவி புகார்

ஆகஸ்ட்



திருநெல்வேலி:"தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் பிரச்னையில் எனது கணவரை சிக்கவைத்து விட்டனர்' என, நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா தெரிவித்துள்ளார்.குண்டு வைக்க திட்டமிட்டதாக நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா, நேற்று தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதே மனுவை, நேற்று நெல்லை கோர்ட்டிலும் வெளியிட்டனர்.



அதில் தெரிவித்திருப்பதாவது:எனது கணவர் கபூர் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏ.ஆர்., செருப்புக் கடையில் வேலை பார்த்தார். அவர் ஆரம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கில் மாநில அமைப்பாளராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு திருச்செந்தூர் லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.



பின்னர் தவ்ஹீத் ஜமாத்தின் பரங்கிமலை கிளைச் செயலராகச் செயல்பட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சென்னை ஆலந்தூரில் ஒரு பள்ளி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அந்தச் சிறுமிக்காகப் போராடி நீதி கிடைக்கச் செய்தார். ஜூலை 13ம் தேதி எனது தம்பி திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன் வரவேற்பு விழா பேட்டையில் நடந்தபோது அதில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.



பேட்டை மகதூம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் ஆகியோருக்கு இடையே யார் நிர்வாகத்தை நடத்துவது என்பது தொடர்பாக மோதல் நடந்தது. இதில் என் கணவர் தவ்ஹீத்தில் இருந்தாலும் சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூலை 27ம் தேதி சீருடை அணியாத போலீசார் வந்து எனது கணவரை அழைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் எனது கணவர் கைதானது குறித்து நாளிதழ்களைப் பார்த்து அதிர்ந்து போனேன்.



எனது கணவர் மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூர் ஜமாத் பிரச்னையால் உளவுத் துறையினர் திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.மறுநாள் சிறையில் அவரிடம் பேசியபோது, "சுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம் என்றும் இதன் மூலம் உள்ளூர் பாதுகாப்பை அதிகப்படுத்து வோம் எனவும், மீறினால் உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைப் போம்' எனவும் போலீசார் கூறியதாகச் சொன்னார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ., க்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Thursday, June 26, 2008

வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம் !


நன்றி : சிங்கை இமாம் அலி

Thursday, June 19, 2008

திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்

மஹாபாரத திருவிழாவின் பெயரில் சூதாட்டம் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள் நடக்கும் மஹாபாரத திருவிழாக்களில் கட்டைகள் உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம் நடந்து வருகிறது. மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் பழமை மாறாமல் இன்றளவிலும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய திருவிழாக்கள் கிராமங்கள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். மஹாபாரத கதைகளை கூறி 15 நாட்கள் கிராமங்களில் திருவிழா களைகட்டும். பொதுவாக மே இறுதி வாரத்திலும், ஜூன் முதல் வாரத்தில் இத்திருவிழா மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும். மஹாபாரத திருவிழா நடக்கும் இடங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூதாட்ட ஏஜென்ட்கள் ஊர் பெரியர்வர்களை அணுகி கட்டைகளை வைத்து சூதாட்டம் நடத்த பெரிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டுதான் பல கிராமங்களில் விழாவை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். சூதாட்டகாரர்கள் கொடுக்கும் பணத்தில் உள்ளூர் வருவாய் துறையை சேர்ந்தவர்களில் இருந்து போலீஸார் வரை ஊர் பெரியவர்கள் மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் சூதாட்டம் நடக்கும் இடத்தில் எந்தவித தகராறு நடந்தாலும் போலீஸார் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கட்டைகளை உருட்டி நடக்கும் சூதாட்டத்தில் ஒரு இரவில் மட்டும் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பது உண்டு. இழந்த பணத்தை மீட்பதற்காக சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் முதல், டிராக்டர் வரை பந்தய பொருளாக வைத்து சூதாடும் கொடுமையும் நடந்து வருகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற்று பணத்தை பெற்றுகொண்டு வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை சூதாட்டம் நடத்தும் கும்பல் மிரட்டி பணத்தை பறித்து கொள்வார்கள். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடமும், திருவிழாவை நடத்துபவர்களிடம் புகார் கூறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பொதுவாக மஹாபாரத கதையில் பகலில் 18 நாள் சொற்பொழிவு நடக்கும். சூதாட்ட காரர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், திருவிழா நடத்துவோர்களிடம் கூறி மேலும் சில நாள் திருவிழாவை நடத்துவதும் உண்டு. கூடுதலாக திருவிழா நடக்கும் நாட்களுக்கு தெருக்கூத்து கலைஞர்களுக்கு தனி தொகையை சூதாட்டகாரர்கள் கொடுத்து விடுவர். குறிப்பிட்ட இடத்தில் மஹாபாரத திருவிழா நடக்கிறது என்றால் திருவிழாவை நடத்தும் ஊர்காரர்கள் கூட திருவிழாவை விளம்பரப்படுத்த மாட்டார்கள். மாறாக சூதாட்டக்காரர்கள் காரில் சென்று திருவிழா நடத்துவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இரவில் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக வாகன வசதிகளையும் சூதாட்டகாரர்கள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை நடந்த மஹாபாரத திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார்கள். இதற்காக நிலத்தை பலர் விற்று பணத்தை இழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மஹாபாரத திருவிழா நடக்கும் கிராமங்களில் போலீஸார் ரோந்து சென்று கட்டை சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


நன்றி : தினமலர்

Wednesday, June 18, 2008

ராக்கெட் லாஞ்சர் குண்டுகள பின்னணி என்ன ?

துபாயிலிருந்து வந்த கண்டெய்னருக்குள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பதுக்கல் *தூத்துக்குடியில் சிக்கின

தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?

இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த ஓன்று.இப்படி கைது செய்யப் படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த ஒரு முஸ்லிமுக்கும் சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை பின்னணி என்ன எனபது பற்றி தான்.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள்.நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள்

காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்

விருதுநகரைச் சேர்ந்த நசீர் அகமது மகள் ஜாஸ்மின்(18). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றார். ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ரெங்கராஜ். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஜாஸ்மினுக்கும், ரெங்கராஜூக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டாக காதலித்து வரும் இவர்கள் உல்லாசமாக திரிந்தனர். இந்நிலையில் ஜாஸ்மினுக்கு திருமணம் செய்ய பெற்றோர், மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்.


இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்




இதற்க்கு முன்னும் இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம்.இனிய சகோதரிகளே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.

விநாயகர் பெயரில் நடத்த இருந்த கலவர திட்டம் முறியடிப்பு! தாசில்தார் ,ஏ.டி.எஸ்.பி க்கு நன்றி

தனியார் நிலத்தில் வைக்கப்பட்ட சிலை அகற்றம்: பேச்சுவார்த்தையில் தீர்வு

கரூர்: தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலை குறித்தான பிரச்னையில், நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. தாசில்தார், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தீர்வு காணப்பட்டது. அரவக்குறிச்சி அடுத்துள்ளது பாவா நகர். 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரில், 35 ஏக்கருக்கு மனை பிரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 ஏக்கர் பரப்பளவில் மனை பிரிக்கும் ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலத்தின் எல்லையில், பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள புற்று ஒன்று உள்ளது. புற்றை சுற்றி வேல், சூலம் நட்டு இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். நாகம்மன் தேவி என்று கூறி வழிபடும் இங்கு, துரைசாமி(60) என்பவர் பூசாரியாக உள்ளார்.


கடந்த இரண்டு நாள் முன், புற்றுக்கு அருகில் நான்கரை அடி உயரத்தில் கருப்பண்ணசாமி மற்றும் ஒரு அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை துவங்கப்பட்டது. இதைக்கண்ட நிலத்தின் உரிமையாளர் தாஜுதீன், தன்னுடைய எதிர்ப்பை பூசாரியிடம் கூறியுள்ளார். மேலும், தனக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைத்து பூசாரி அத்துமீறி நடந்து கொள்வதாக அரவக்குறிச்சி போலீஸாரிடம் புகார் அளித்தார். நாகம்மன் தேவியை வழிபடும் சிலர், பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். சிலை பிரச்னை, மதரீதியாக பெரிதாகிவிடாமல் தடுக்க, அரவக்குறிச்சி தாசில்தார் பத்மன், ஏ.டி.எஸ்.பி., மூக்கையா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.


பேச்சுவார்த்தை முடிவில், புற்று அருகில் வைக்கப்பட்ட சிலையை அகற்றிக்கொள்ள பூசாரி துரைசாமி ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் அமைதி காப்பதாக நில உரிமையாளர் ஒப்புக்கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பூசாரி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நன்றி : தினமலர்

கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?

டெட்டனேட்டர் திருட்டு வழக்கில் குழப்பம் 'கரன்ஸி' பலத்தில் பலர் 'எஸ்கேப்'

கரூர்: கரூர் அருகே திருட்டு போனதாக கூறப்படும் 17 ஆயிரம் டெட்டனேட்டர் தொடர்பான விசாரணையில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் பலர் வழக்கில் இருந்து தங்கள் செல்வாக்கு மூலம் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரத்தில், கரூரை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் கடந்த மாதம் 24ம் தேதி 17ஆயிரத்து 100 டெட்டனேட்டர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி., சண்முகவேல் தலைமையில் விசாரணை நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை தொடர்ந்தது.


திருட்டு நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு அருகில் முருகேசன், வடிவேலு, தங்கராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் தோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து பின்னர் எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. மேலும், அனுமதி பெறாமல் கணக்கில் காட்டப்படாத அளவு டெட்டனேட்டர்களை முருகேசன் இருப்பு வைத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். வழக்கில் தொடர்புடைய முருகேசன், அவர் சகோதரர் குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய போலீஸ் தனிப்படை, பிறகு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெடிமருந்து வாங்கிய, இருப்பு வைத்திருந்த குவாரி உரிமையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது.


பின்னர் குவாரிகளில் வெடிமருந்து இருப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கில் சம்மந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்டத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகார பலம் மற்றும் "கரன்ஸி' பலம் இவர்களை காப்பாற்றியதாக அதிருப்தி போலீஸார் கூறினர். கரூர் மாவட்டத்தில் 23 குவாரிகளில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ஏராளமான டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, முருகேசனுக்கு சொந்தமான குடோனில் திருடப்பட்ட டெட்டனேட்டர் அனைத்தும் கடல் கடந்திருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படும் நிலையில், தற்போது திடீரென 15 ஆயிரம் டெட்டனேட்டர் கணக்கில் காட்டப்பட்டது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தற்போது காட்சிக்கு வைத்திருக்கலாம் என்று தனிப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர். கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த முருகன் உட்பட எட்டு பேரை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். எவ்வாறு திருட்டு நடவடிக்கை நடந்தது? கரூரில் இருந்து கடத்தி செல்லப்படும் வெடிமருந்து விற்பனையாகும் இடம், வாங்குவோர் யார்? என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாவட்டத்தின் முக்கிய "புள்ளிகள்' சிலரை காப்பாற்றவே, மாவட்ட போலீஸ் அவசரமாக எட்டு பேரை கைது செய்து விசாரணையை முடித்ததாக பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.

Monday, June 2, 2008

சாதாரணக் குற்றவாளியை கூட தீவிரவாதியாக மாற்ற முடியும்-மீடியாக்களின் தொடரும் சாதனை




திருச்சியில் சிக்கிய நெல்லை வாலிபர் வீட்டில் சோதனை! (தலைப்பேஎவ்வளவு தூக்கலா இருக்கு எதோ ஒசாமா பின் லேடனையே பிடிசிட்ட மாதிரிஎன்னமா ஒரு பில்டப்)

செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008

கடையநல்லூர்: திருச்சியில் 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி கோட்டை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சமஸ்பிரான் தெருவில் மின்சார வயர்கள், 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராஜாமுகமது என தெரியவந்தது. அவர் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதும், போலி முகவரி கொடுத்து மூன்று பாஸ்போர்டுகள் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கோட்டை போலீசார் (?) ராஜாமுகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தீவிரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருக்கிறதா, என விசாரணை நடத்தப்பட்டது.

ராணுவத்தில் இவர் எந்த பிரிவில் பணியாற்றினார், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவு அல்லது தொழில்நுட்ப பிரிவில் அவர் வேலை பார்த்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜாமுகமதுவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றி பயிற்சியளித்து வரும் துவாக்குடி அருகேயுள்ள காட்டூரை சேர்ந்த பேராசிரியர் (பேராசிரியர் பெயரை இன்னும் கண்டு பிடிக்க வில்லையோ என்னவோ )ஒருவரிடமும், கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தென்காசி அருகேயுள்ள ராஜாமுகமதுவின் வீட்டில் திருச்சி தனிப்படை போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அச்சன்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

திருச்சி தனிப்படை போலீசாரும் நேற்று சோதனை நடத்த தென்காசிக்கு வருவதாக அச்சன்புதூர் போலீசார் தெரிவித்தனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்




ஆட்டயப் போட்டதுல வீட்டக் கட்டுது இஸ்ரேல்


ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் புதிய வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்

Monday, 06.02.2008, 09:21am (GMT)

மத்திய கிழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியாக பாலஸ்தீனர்களும் சர்வதேச சமூகத்தினரும்

கருதும் ஒரு இடத்தில் யூதக் குடியேற்றக்காரர்களுக்காக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றை

இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இத்திட்டம், ஜெருசலேமில் தங்களது நிலையை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இத்திட்டம் சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.மன்ற தீர்மானங்களையும் நிச்சயமாக மீறுகிறது என்று பாலஸ்தீன அரசு கூறியுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் அல்மர்ட், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் சமாதானப் பேச்சுக்களை நாளை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்

இந்தியாவின் அமைதிக்கு ஆப்பு- ஆட்சிக்கு வந்ததும் அதிரடி

மீண்டும் பொடா: பிஜேபி உறுதி

.

Monday, 02 June, 2008 11:06 AM
.
புதுடெல்லி, ஜூன்.2: கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் பிஜேபி கையில் எடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
.
புதுடெல்லியில் நேற்று பிஜேபியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில், தலைமை உரையாற்றிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், நாட்டில் தற்போது 200 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 7 மாநிலங்களில் ஆட்சி செய்யும் மிகப்பெரிய தேசியக் கட்சி பிஜேபி தான் என்று தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ள எல்.கே.அத்வானி வெற்றிப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதே சமயம் மாற்றங்களை கொண்டு வரும் கட்சியாகவும், இளைஞர்களின் கட்சியாகவும் பிஜேபி உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கட்சியின் அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது பிஜேபியின் முடிவு என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு பிஜேபி தொடர்ந்து அளித்து வந்த நெருக்குதலால்தான் மகளிர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறு பவர்களால் ஏற்படும் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சர்வக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தேசிய அளவில் கருத்தொற்றுமை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழிக்க பொடா அல்லது அது போன்ற ஒரு கடுமையான சட்டம் மறுபடியும் கொண்டு வரப்படும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.

மதச்சார்பின்மை கொள்கை ‘தர்ம நிர்பேக்ஷ்’ (மதங்களிடம் அலட்சியமாக இருப்பது) என்று இருப்பதற்கு பதிலாக ‘பாந்த் நிர்பேக்ஷ்’ (பல்வேறு மதங்களிடம் நடுநிலையோடு இருப்பது) என்று மாற்றம் செய்யப்படவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். மதச்சார்பின்மை தொடர்பாக பிஜேபியின் வரையறைதான் சரியான ஒன்று என்றும் அவர் கூறினார்.

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள பிஜேபி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் தனது செயல்திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிகுறிகள் இந்த கூட்டத்தில் தெளிவாக தென்பட்டன.

நன்றி : மாலைச்சுடர்

மனித நீதி பாசறை- யார் இவர்கள் ?













































நன்றி : அனீஸ் ரஹ்மான்

Sunday, June 1, 2008

சபரிமலையும் சர்க்கரைப் பொய்யும் - இதுவரை ஏமாந்த பக்தர்கள்

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்

ஞாயிறு, ஜூன் 1, 2008

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.


சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.


கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.

சபரிமலை பூசாரி ராகுல் ஈஸ்வர் ஒரு பேட்டியில், "மகரவிளக்கு பற்றிய சர்ச்சை தெளிவான பக்தர்கள் மனதில் என்றும் இருந்ததில்லை. அறியாமையில் இருக்கும் பக்தர்கள் தான் இதை இவ்வளவு காலமாக நம்பி கொண்டிருந்தார்கள். மகரவிளக்கும் மகர ஜோதியும் வேறு வேறு. மகர ஜோதி என்பது ஒரு புனிதமான நட்சத்திரம். மகர விளக்கு பொன்னம்பல மேடு என்னுமிடத்தில் இருக்கும் தீபத்தில் இருந்து உருவாக்கபடும் ஒளி," என உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். இதை தொடரந்து மகரவிளக்கினை உருவாக்குவதில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.


மகர ஜோதியினை பற்றிய உண்மை வெளியானதற்கு பிறகு கட்டமைக்கபட்ட புனிதங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையுமா

நன்றி :poetry-tuesday.blogspot.com/2008/06/sabari-malai-makaravilakku.html

Wednesday, May 28, 2008

ஆட்சியைப் பிடிக்க சுயேட்சை க்களை இரகசிய இடத்தில் மறைத்துவைத்திருக்கும் ப ஜ க


சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
Thursday, 05.29.2008, 05:33am (GMT)


கர்நாடகாவில் பா.ஜ.வை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் ரகசிய இடத்தில் பாரதிய ஜனதா தங்க வைத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களை பிடித்த பா.ஜ. நாளை பதவியேற்கிறது.

முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். பெரும்பான்மைக்கு மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேச்சைகளும் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், 80 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் 28 இடங்களை பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி நடந்தால், ஆட்சி அமைக்க 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

இதனால், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் விலை பேசலாம் என்று பா.ஜ. கருதுகிறது. எனவே, 6 சுயேச்சை எம்.எல்..க்களையும் பா.. நேற்று முன்தினம் இரவே ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது. அவர்கள் கர்நாடகாவிலேயே இருக்கிறார்களா அல்லது வேறு மாநிலத்துக்கு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்களா என தெரியவில்லை.

நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்பாகதான் அவர்கள் அங்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தமிழ் நியூஸ்

இஸ்ரேல் பதுக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் -அமெரிக்க அதிபரின் குற்ற சாட்டு


இஸ்ரேலிடம் 150 அணு குண்டுகள் காட்டர் எச்சரிக்கை !


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் இஸ்ரேல் மொத்தம் 150 அணு குண்டுகளை உலக சமுதாயத்திற்கு தெரியாமல் பதுக்கி வைத்திருப்பதாக உலக சமுதாயத்திற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இந்த 150 அணு குண்டுகளும் சர்வதே சட்டங்களுக்கு உட்படாத திருட்டுத்தனமான குண்டுகள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா 12.000 அணு குண்டுகளை வைத்துள்ளது, ரஸ்யாவிடமும் அதேயளவு உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிடம் பல நூற்றுக்கணக்கான அணு குண்டுகள் உள்ளன என்றும் 83 வயதுடைய ஜிம்மிக்காட்டர் வேல்ஸ்சில் வைத்துத் தெரிவித்தார். மற்றைய நாடுகள் தம்மிடம் அணு குண்டு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளன ஆனால் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதே பாரிய தவறு என்றும் தெரிவித்தார். காட்டரின் கருத்து பொறுப்பற்ற கருத்தென்று இஸ்ரேலிய உளவுப்பிரிவு தலைவர் அகரோன் சீவி பார்காஸ் தெரிவித்தார். இது குறித்து காட்டர் மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அதேவேளை பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மதித்து செயற்படவில்லை என்றும் அவர் குறைகூறினார். காட்டர் 2002 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி : அலைகள்