Thursday, June 19, 2008

திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்

மஹாபாரத திருவிழாவின் பெயரில் சூதாட்டம் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள் நடக்கும் மஹாபாரத திருவிழாக்களில் கட்டைகள் உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம் நடந்து வருகிறது. மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் பழமை மாறாமல் இன்றளவிலும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய திருவிழாக்கள் கிராமங்கள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். மஹாபாரத கதைகளை கூறி 15 நாட்கள் கிராமங்களில் திருவிழா களைகட்டும். பொதுவாக மே இறுதி வாரத்திலும், ஜூன் முதல் வாரத்தில் இத்திருவிழா மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும். மஹாபாரத திருவிழா நடக்கும் இடங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூதாட்ட ஏஜென்ட்கள் ஊர் பெரியர்வர்களை அணுகி கட்டைகளை வைத்து சூதாட்டம் நடத்த பெரிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டுதான் பல கிராமங்களில் விழாவை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். சூதாட்டகாரர்கள் கொடுக்கும் பணத்தில் உள்ளூர் வருவாய் துறையை சேர்ந்தவர்களில் இருந்து போலீஸார் வரை ஊர் பெரியவர்கள் மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் சூதாட்டம் நடக்கும் இடத்தில் எந்தவித தகராறு நடந்தாலும் போலீஸார் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கட்டைகளை உருட்டி நடக்கும் சூதாட்டத்தில் ஒரு இரவில் மட்டும் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பது உண்டு. இழந்த பணத்தை மீட்பதற்காக சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் முதல், டிராக்டர் வரை பந்தய பொருளாக வைத்து சூதாடும் கொடுமையும் நடந்து வருகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற்று பணத்தை பெற்றுகொண்டு வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை சூதாட்டம் நடத்தும் கும்பல் மிரட்டி பணத்தை பறித்து கொள்வார்கள். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடமும், திருவிழாவை நடத்துபவர்களிடம் புகார் கூறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பொதுவாக மஹாபாரத கதையில் பகலில் 18 நாள் சொற்பொழிவு நடக்கும். சூதாட்ட காரர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், திருவிழா நடத்துவோர்களிடம் கூறி மேலும் சில நாள் திருவிழாவை நடத்துவதும் உண்டு. கூடுதலாக திருவிழா நடக்கும் நாட்களுக்கு தெருக்கூத்து கலைஞர்களுக்கு தனி தொகையை சூதாட்டகாரர்கள் கொடுத்து விடுவர். குறிப்பிட்ட இடத்தில் மஹாபாரத திருவிழா நடக்கிறது என்றால் திருவிழாவை நடத்தும் ஊர்காரர்கள் கூட திருவிழாவை விளம்பரப்படுத்த மாட்டார்கள். மாறாக சூதாட்டக்காரர்கள் காரில் சென்று திருவிழா நடத்துவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இரவில் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக வாகன வசதிகளையும் சூதாட்டகாரர்கள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை நடந்த மஹாபாரத திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார்கள். இதற்காக நிலத்தை பலர் விற்று பணத்தை இழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மஹாபாரத திருவிழா நடக்கும் கிராமங்களில் போலீஸார் ரோந்து சென்று கட்டை சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


நன்றி : தினமலர்

Wednesday, June 18, 2008

ராக்கெட் லாஞ்சர் குண்டுகள பின்னணி என்ன ?

துபாயிலிருந்து வந்த கண்டெய்னருக்குள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பதுக்கல் *தூத்துக்குடியில் சிக்கின

தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?

இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த ஓன்று.இப்படி கைது செய்யப் படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த ஒரு முஸ்லிமுக்கும் சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை பின்னணி என்ன எனபது பற்றி தான்.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள்.நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள்

காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்

விருதுநகரைச் சேர்ந்த நசீர் அகமது மகள் ஜாஸ்மின்(18). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றார். ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ரெங்கராஜ். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஜாஸ்மினுக்கும், ரெங்கராஜூக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டாக காதலித்து வரும் இவர்கள் உல்லாசமாக திரிந்தனர். இந்நிலையில் ஜாஸ்மினுக்கு திருமணம் செய்ய பெற்றோர், மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்.


இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்




இதற்க்கு முன்னும் இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம்.இனிய சகோதரிகளே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.

விநாயகர் பெயரில் நடத்த இருந்த கலவர திட்டம் முறியடிப்பு! தாசில்தார் ,ஏ.டி.எஸ்.பி க்கு நன்றி

தனியார் நிலத்தில் வைக்கப்பட்ட சிலை அகற்றம்: பேச்சுவார்த்தையில் தீர்வு

கரூர்: தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலை குறித்தான பிரச்னையில், நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. தாசில்தார், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தீர்வு காணப்பட்டது. அரவக்குறிச்சி அடுத்துள்ளது பாவா நகர். 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரில், 35 ஏக்கருக்கு மனை பிரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 ஏக்கர் பரப்பளவில் மனை பிரிக்கும் ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலத்தின் எல்லையில், பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள புற்று ஒன்று உள்ளது. புற்றை சுற்றி வேல், சூலம் நட்டு இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். நாகம்மன் தேவி என்று கூறி வழிபடும் இங்கு, துரைசாமி(60) என்பவர் பூசாரியாக உள்ளார்.


கடந்த இரண்டு நாள் முன், புற்றுக்கு அருகில் நான்கரை அடி உயரத்தில் கருப்பண்ணசாமி மற்றும் ஒரு அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை துவங்கப்பட்டது. இதைக்கண்ட நிலத்தின் உரிமையாளர் தாஜுதீன், தன்னுடைய எதிர்ப்பை பூசாரியிடம் கூறியுள்ளார். மேலும், தனக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைத்து பூசாரி அத்துமீறி நடந்து கொள்வதாக அரவக்குறிச்சி போலீஸாரிடம் புகார் அளித்தார். நாகம்மன் தேவியை வழிபடும் சிலர், பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். சிலை பிரச்னை, மதரீதியாக பெரிதாகிவிடாமல் தடுக்க, அரவக்குறிச்சி தாசில்தார் பத்மன், ஏ.டி.எஸ்.பி., மூக்கையா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.


பேச்சுவார்த்தை முடிவில், புற்று அருகில் வைக்கப்பட்ட சிலையை அகற்றிக்கொள்ள பூசாரி துரைசாமி ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் அமைதி காப்பதாக நில உரிமையாளர் ஒப்புக்கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பூசாரி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நன்றி : தினமலர்

கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?

டெட்டனேட்டர் திருட்டு வழக்கில் குழப்பம் 'கரன்ஸி' பலத்தில் பலர் 'எஸ்கேப்'

கரூர்: கரூர் அருகே திருட்டு போனதாக கூறப்படும் 17 ஆயிரம் டெட்டனேட்டர் தொடர்பான விசாரணையில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் பலர் வழக்கில் இருந்து தங்கள் செல்வாக்கு மூலம் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரத்தில், கரூரை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் கடந்த மாதம் 24ம் தேதி 17ஆயிரத்து 100 டெட்டனேட்டர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி., சண்முகவேல் தலைமையில் விசாரணை நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை தொடர்ந்தது.


திருட்டு நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு அருகில் முருகேசன், வடிவேலு, தங்கராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் தோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து பின்னர் எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. மேலும், அனுமதி பெறாமல் கணக்கில் காட்டப்படாத அளவு டெட்டனேட்டர்களை முருகேசன் இருப்பு வைத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். வழக்கில் தொடர்புடைய முருகேசன், அவர் சகோதரர் குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய போலீஸ் தனிப்படை, பிறகு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெடிமருந்து வாங்கிய, இருப்பு வைத்திருந்த குவாரி உரிமையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது.


பின்னர் குவாரிகளில் வெடிமருந்து இருப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கில் சம்மந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்டத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகார பலம் மற்றும் "கரன்ஸி' பலம் இவர்களை காப்பாற்றியதாக அதிருப்தி போலீஸார் கூறினர். கரூர் மாவட்டத்தில் 23 குவாரிகளில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ஏராளமான டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, முருகேசனுக்கு சொந்தமான குடோனில் திருடப்பட்ட டெட்டனேட்டர் அனைத்தும் கடல் கடந்திருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படும் நிலையில், தற்போது திடீரென 15 ஆயிரம் டெட்டனேட்டர் கணக்கில் காட்டப்பட்டது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தற்போது காட்சிக்கு வைத்திருக்கலாம் என்று தனிப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர். கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த முருகன் உட்பட எட்டு பேரை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். எவ்வாறு திருட்டு நடவடிக்கை நடந்தது? கரூரில் இருந்து கடத்தி செல்லப்படும் வெடிமருந்து விற்பனையாகும் இடம், வாங்குவோர் யார்? என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாவட்டத்தின் முக்கிய "புள்ளிகள்' சிலரை காப்பாற்றவே, மாவட்ட போலீஸ் அவசரமாக எட்டு பேரை கைது செய்து விசாரணையை முடித்ததாக பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.