Wednesday, February 8, 2012


ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ருவரி 10 முதல் 20 வரை தேசிய பொது சுகாதார வாரம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.




சுமார் 110 கோடி மக்கள் வாழும் நம் இந்தியா திருநாட்டில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழவும் அதன் மூலம் நம் தேசம் வலிமை பெறவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு தழுவிய பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.


இதில் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நல்ல ஆலோசனைகளும் யோகா போன்ற இலவச பயிற்சிகளும் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் இது செயல் படுத்தப் படுவதன்னல் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெட்ட்ருகொள்ள அழைக்கப் படுகிறார்கள்

தமிழக,கேரள அணைகளுக்கு ஆபத்து!

அமெரிக்க உதவியால் அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சி கூடத்தால் ..

தமிழக,கேரள அணைகளுக்கு ஆபத்து!..
தமிழக-கேரள எல்லையில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தால் கேரள அணைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அணுக் கதிர்வீச்சு குறித்த ஆராய்ச்சியாளர் வி.டி. பத்மநாபன் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.அறிவியலால் நன்மை மட்டுமே ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் நியூட்ரினோ.

நியூட்ரினோ என்பது அணுவில் இருந்து பிளக்கப்படுவதாகும். ஆனால் இயற்கையிலேயே சூரியக் கதிர்களில் இருந்தே நாம் நியூட்ரினோ சக்தியைப் பெற முடியும். இப்போது அரசாங்கம் அமைக்கவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

முதலில் இந்த ஆராய்ச்சிக் கூடம் ஊட்டியில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக இது இப்போது தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்குக் கனமான பாறைகள் தேவை. அத்தகைய பாறைகள் உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் கிடைக்கிறது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நியூட்ரினோக்கள் ராணுவப் பயன்பாட்டுக்காக ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

நியூட்ரினோவால் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் எத்தகைய வலிமையான பொருள்களைக் கொண்டு தடுத்தாலும் எதிரியை அழிக்கும் வல்லமை பெற்றது.

தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சிக் கூடத்தால் இடுக்கி அணைக்கு பாதிப்பு ஏற்படும்.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக 10 லட்சம் டன் பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இந்தப் பாறைகளை வெட்டுவதற்காக 1,000 டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படும். இந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நில நடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இடுக்கி அணை வலுவிழக்கும் ஆபத்தும் உள்ளது.

இந்தப் பாறைகளை உடைப்பதன் காரணமாக 1 லட்சம் டன் எடையுள்ள தூசி காற்றில் பரவும். இதனால் பசுமை மாறாக் காடுகளான மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் மாசுபடும்.

அமெரிக்காவுடன் இணைந்து அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சிக் கூடத்தைப் பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் அரசு அமைக்கிறது. இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார் பத்மநாபன்.

Tuesday, February 7, 2012

அரிய புகைப்படம்

விளையாடலாம் வாங்க

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு இதோ ஜி மெயில் இன் கேம்
வெற்றி பெற்றவர்கள் தெரிவிக்கவும்










இங்கு சென்று விளையாடுங்கள்
http://www.monocubed.com/?p=549

Sunday, February 5, 2012

முஸ்லிம்களை ஏமாற்றும் மத்திய அரசு




சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும். அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.

முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

ஆனால் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையிலும், முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையிலும் முஸ்லிம்களுக்கு தேசிய அளிவில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதுமுள்ள முஸ்லிம் இயக்கங்களால் எழுப்பப்பட்டு வருகிறது.


இதனைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு 15 அம்சத் திட்டங்கள் என்ற பெயரில் முஸ்லிம்களைத் திருப்திபடுத்த நினைத்து முஸ்லிம்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாய்மாலம் செய்து வருகிறது.

அதற்கேற்றாற்போல், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது முஸ்லிம்களின் நிலையை மத்திய அரசு அறிந்து கொள்வதற்குத் தான்...'' என்று பேசி வருகிறார். அதாவது, வேறு வார்த்தைகளில் சொன்னால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை நியமிக்கவில்லை என்று சொல்கிறார் ப.சிதம்பரம்.

இந்நிலையில்தான், நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள - பொதுவாக பரவலாக செய்தியாக்கப்படாத அல்லது அறியப்படாத -நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பது மறுக்கப்பட்டு வரும் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது.

இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. அதே சமயம், மத்திய காங்கிரஸ் அரசை முஸ்லிம்கள் பாராட்டப்போவதுமில்லை.

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும்.

மத்திய அரசு நடைமுறை யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் இயற்றும் சட்டங்களால் எவ்விதப் பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும்.

இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.
தவல்கள் உதவி : கீற்று