Monday, February 25, 2008

சிறைக்குள்ளும் தாக்கப்படும் சிறுபான்மையினர்


சிறையில் கைதிகள் மோதல் இருவர் காயம்: போலீஸ் விசாரணை


திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் தாரளமாக மொஃபைல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது சில நாட்களாக நடந்து வரும் அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளிடம் மொஃபைல்போன் உள்ளாத என்று நேற்று முன்தினமும் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மணப்பாறை போலீஸ்காரர் மகன் இங்கர்சால் என்பவனிடம் மொஃபைல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் தன்னிடம் இருந்த மொஃபைல்போனை கண்டுபிடிக்க காரணம், சிறையில் இருக்கும் மற்றொரு கைதி பாலக்கரையைச் சேர்ந்த சலீம் (27) என்பவன் என்று இங்கர்சால் சந்தேகித்தான். இங்கர்சால் நேற்று காலை சலீமிடம் கேட்டான். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இங்கர்சால் மற்றும் சலீம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சிறைத்துறை போலீஸார், காயமடைந்த இருவரையும் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


Thanks:Dinamalar

No comments: