Wednesday, February 27, 2008

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மகளை தாக்க முயற்சி:

மாணவர்களிடம் இருந்து பாதுகா பு படைமீட்டது

புதுடெல்லி, பி. 26-பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் உபேந்தர் கவுர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியாக உள்ளார்.வரலாற்று துறை மாணவர் களின் பாடத்திட்டத்தில் ராமாயணம் தொடர்பாக ஏ.கே.ராமானுஜம் எழுதிய விமர்சனகட்டுரைகளை சேர்த்து இருந்த னர். அதில் ராமாயணம் பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றுஇருந்தன.இதற்கு பாரதீய ஜனதா மாணவர் அமைபான அகில பாரத வித்யாத்தி பரிசத் எதிர்பு தெரிவித்தது. அவர்கள் நேற்றுமாலை டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் துணைவேந்தர் தீபக் பென்டசை சந்திக்க சென் றனர். ஆனால் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.எனவே அவர்கள் வரலாற்று துறைக்கு வந்தனர். அபோது உள்ளே பிரதமர் மகள் உபிந்தர்கவுர் மற்றும்பேராசிரியர்கள் அமர்ந்து இருந்தனர்.மாணவர்கள் திடீரென வர லாற்று துறை அலுவலகத்தை தாக்க தொடங்கினர். ஜன்னல், மேஜை, நாற்காலிகளைஅடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த ஆசிரியர்களைம் தாக்க பாய்ந்தனர்.பிரதமர் மகளுக்கு ஏற் கனவே சிறபு பாதுகாபு படை போலீசார் பாதுகாபு அளித்து வந்தனர். அவர்கள் உபிந்தர்கவுரை அங்கி ருந்து பத்திரமாக மீட்டு சென்ற னர்.ஆனால் மாணவர்கள் வரலாற்று துறை தலைவர் சையது ஜாகீர் உசேனை சரமாரியாக தாக்கினார்கள்.இந்த சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரபு ஏற்பட்டது.


http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=253276

No comments: