Monday, February 25, 2008

விஷ்வ இந்து பரிஷத் கூட்டம்



பொள்ளாச்சி: விஷ்வ இந்து பரிஷத் இளைஞர் அணி சார்பில் சி.கோபாலபுரத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. கிளை அமைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், "பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் சிலர் இந்துக்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மதமாற்ற நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்தி, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்' . மேலும், சித்திரை மாதம் முதல் தேதிக்கு பதிலாக, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ரவிபிரகாஷ், கோபால் சபரீஸ்வரன், சிவகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Thanks: Dinamalar

1 comment:

Anonymous said...

விஷ்வ இந்து பரிஷத் பற்றி செய்தியை தந்த உங்கலுக்கு நன்றி. இவர்களின் ஆட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.
-நூர்.