Sunday, February 10, 2008

ஹிஜாபை பத்தி என்ன தெரியும் இவர்களுக்கு !

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் பர பரப்பான குற்றங்கள் செய்து அல்லது மிகக் கேவலமான குற்றங்கள் செய்து பிடி படும் அத்தனை குற்ற வாளிகளும் அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது விபச சாரத்தில் கைது செய்யப் பட்ட பெண் குற்ற வாளியாக இருந்தாலும் சரி.அவர்களை காவல் துறை கைது செய்து நீதி மன்றம் கொண்டு வரும் போது அவர்களுக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் முக மூடி இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியம் கொடுக்க வேண்டி அனுமதிக்கப் பட்ட ஹிஜாபை ஒத்து இருக்கிறது.இதனால் ஒன்றும் அறியாத மக்கள் இதுவும் இஸ்லாமியர்களால் தான் செய்யப் படுகிறது என்று ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு பரிதாபமான சூழ்நிலை இந்த மக்களுக்கு வந்து சேருகிறது.இங்கே நமக்கு புரியாத ஒரு விஷயம் இப்படி மூடி மறைத்து கைது செய்து கொண்டுவரும் இவர்கள் என்ன அப்படி நாட்டுக்காக தங்கள் எதையாவது தியாகம், செய்தவர்களா.இல்லையே இந்த நாட்டை அழிக்கும் விசயங்களில் அல்லது இந்த நாட்டுக்கு அவமானம் தேடித் தரும் விசயங்களில் ஈடு பட்டவர்கள் அல்லது தேடப் பட்டவர்கள் தானே .அப்படி இருக்கும் போது அவர்களின் முகத்தை இந்த உலகுக்கு கட்டாயம் காண்பித்தே தீர வேண்டும்.இது இப்படி இருக்க நமது காவல் துறையால் கைது செய்யப் பட்ட எத்தனையோ நபர்கள் குற்ற வாளிகள் இல்லை என்று தீரப்பளிக்கப் பட்டு இருக்கிறது.ஒரு வேளை அப்படி ஒரு நிரபராதி யின் முகம் தவறுதலாக காட்டப் பட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணம் தான் உங்கள் உண்மையான காரணம் என்றால் அவர்களை மறைவாக அலல்து முழுவதுமாக மூடிய நிலையில் கொண்டு வரலாமே.இல்லை இப்படி தான் முகம் மட்டும் தெரியும் விதத்தில் கொண்டு வருவேன் என்றாலும் அதுக்கு இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் காக்கும் இந்த ஹிஜாப் என்ற உன்னதத்தை பயன் படுத்துவதை விட்டு விட்டு அவர்களின் எதாவது ஒரு ஆடையோ அலல்து அது ஒரு ஆண் தான் என்பதனை தெரியப் படுத்தும் வித மான ஆடயயோ அணிவித்து கொண்டு வரலாமே.இன்னும் இஸ்லாம் அல்லாத பெண்கள் விபசார வழக்கில் கைது செய்யப் படுகிறார்கள்.அவர்களும் நீதி மன்றத்துக்கு வரும் போது இத்தகைய செயலிலேயே ஈடு படுகிறார்கள்.உதாரணமாக கொஞ்சம் நாட்களுக்கு முன்பு புவனேஷ்வரி என்றொரு சினிமா நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப் பட்டதும் இன்னும் அவர் கோர்ட் வந்த போது ஹிஜாப் அணிந்து வந்ததையும் சொல்லலாம்.இனி வரும் காலங்களில் மதிப்பிற்குரிய நீதி மன்றங்களும் நீதியை நிலை நாட்டும் எண்ணத்தில் உள்ள உண்மையான நீதிபதி களும் இத்தகைய ஈன செயல் நடந்து விடாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.காரணம் வரலாறுகளில் மறைக்கப் பட்ட எத்தனையோ தியாகங்களை செய்த ஒரு சமுதாயம் இன்று சில நய வஞ்சகர் களால் சிறிது சிறிதாக பயங்கர வாத போர்வையால் மூடப் பட்டுக் கொண்டிருக்கிறது.அதற்கான முயற்சிகள் ஒன்று தான் நான் இங்கு வருத்தத்துடன் சொல்லும் இந்த நிகழ்வும்.இனிய சமுதாயமே இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அது அந்த சமுதாயத்துக்கு தானே இழப்பு என்ற நிலையில் நிற்காமல் மனித நேய அடிப்படையில் உண்மை மனிதர்க்களாய் ஒருமித்து குரல் கொடுப்போம்.இந்தியாவின் மத சார்பின்மையை நிலை நிறுத்துவோம்.

No comments: