Monday, February 11, 2008

சூது வாது தெரியாத தந்தையோ?

சூதாட்டத்தில் மகளை இழந்த தந்தை


காத்மாண்டு : தந்தை சூதாட்டத்தில் தோற்றதால், ஒன்பது வயது பெண், 30 வயது நபருக்கு திருமணம் முடிக்க கடத்தி செல்லப்பட்டாள்.

நேபாளத்தில் தோட்டி மாவட்டத்தில் உள்ளது கபாலிகி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி நவுதி மகாரா(9). இவரது தந்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு சூதாட்டம் ஆடித் தோற்றார். இதற்கு பணையமாக மகளை தாரை வார்த்தார். சூதாட்டத்தில் ஜெயித்த 30 வயது நபர் இந்த பெண்ணை மணம் முடிப்பதற்காக கடத்தி சென்று விட்டார். இந்த செய்தி நேபாள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.சூதாட்டத்தில் வென்ற நபரிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
பெண் உரிமை இயக்கங்களும், மனித உரிமை இயக்கங்களும் இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்புக்கும், பராமரிப்பு செலவுக்கும் அரசு நிதி ஒதுக்கும் படி இந்த அமைப்புகள் கோரியுள்ளன.சூதாட்டத்தில் மகளை வைத்து தோற்ற தந்தையும், சிறுமியை திருமணத்துக்காக கடத்தி சென்ற நபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி பெண்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
நன்றி: தின மலர்

தீய பழக்கங்கள் எந்த அழவுக்கு உத்வேகத்துடன் மனிதனை மதி கெடுக்கிறது என்பதற்கு இது இன்னுமொரு சாட்சி.இனிய சூதாடிகளே இனி முதல் சூது வாது இல்லாமல் இருப்போம்.புராணங்கள் தொட்டு இன்று வரை சூதால் அழிந்தவர்களே அதிகம்.உண்மையை உணர்வோம் உழைத்து வாழ்வோம்.

No comments: