Saturday, February 16, 2008

தமிழ்நாட்டை தகர்க்க சதி




வெடி மருந்து: "இந்து முன்னணி பிரமுகர் கைது "




சனிக்கிழமை, பிப்ரவரி 16, 2008


தென்காசி: கேரளாவில் இருந்து வெடி மருந்து கொண்டு வந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி குண்டு வெடித்தது.இது தொடர்பாக தென்காசி போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த ரத்னசாமியின் மகன் சிவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர் கடையநல்லூர் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஆவார்.




Thanks: Thatstamil








எல்லாரையும் தீவிர வாதி என்று சொல்லும் இந்த தீவிர வாதக் கூட்டம் சமீப காலமாக உண்மையான பல தீவிர வாத செயல்களில் ஈடுபட்டு வருவதும் இன்னும் தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சீர்குலைக்க பல சதி வேலைகளை திட்டமிட்டு இருப்பதும் சமீப காலமாக அம்பலமாக தொடங்கி உள்ளது. இத்தயகய கயவர்களின் கையில் இந்த நாடு சிக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருய் உண்மை இந்தியக் குடிமகனுக்கும் உண்டு என்பதனை இங்கு உணர்த்தக் கடமை பட்டு இருக்கிறோம். இத்தகைய செயல் களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து இந்த நாட்டயும் நாட்டின் அமைதியையும் காப்பாற்ற வேண்டும்.

No comments: