Monday, February 11, 2008

தமிழகத்தை தகர்க்க சதி ?

ராமநாதபுரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல்


ராமநாதபுரம் :தொண்டி அருகே புதுக்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த கார்மேகம் (40) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 83 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டர், 10 மீட்டர் ஒயர் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் கியூபிராஞ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கார்மேகத்தை தொண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

நன்றி : தின மலர்


என்னடான்னு தலைப்ப பார்த்து பயந்துவிடாதீர்கள். சாதாரணமா ஒரு முஸ்லீம் இதுல 10 ல் ஒரு பங்கு பொருட்களோட பிடிபட்டு இருந்தால் இன்றைய நாளிதழ்களின் தலைப்பு செய்தி இதுவாக தான் இருந்திருக்கும் அப்படின்னு சொல்ல வந்தேன்.அண்ணன் கார்மேகம் ஒரு வேளை இது எல்லாம் வைச்சி தீபாவளி கொண்டாடலாம்னு நினைச்சாரோ என்னமோ.ஆனால் சமீபமாக தான் தென்காசியில் தமக்கு தாமே குண்டு வைத்து கொண்டு அதிலே பிடிபட்டு அம்பலமான பிறகு இந்துக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரவேண்டும் அப்படிங்கறதுக்காக தான் இத செய்தோம்னு வெக்கமில்லாம சொன்ன ஒரு கூட்டம் இன்னும் இது போல என்னெல்லாம் செய்து இந்த தமிழ் நாட்ட அழிக்க போகுதோன்னு நினைக்கும் போது இந்த தலைப்பு சரியானது தான்னு தோனுது.

No comments: