Saturday, February 23, 2008

தமிழ் நாட்டை தகர்க்க சதி .....


வெடிபொருள் கடத்திய சேலம் வாலிபர் கைது

தர்மபுரி: வெடிபொருள் கடத்திய சேலம் வாலிபரை தர்மபுரி போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி நான்கு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமாக வாலிபர் சுற்றி வந்தார். அவரை தர்மபுரி டவுன் போலீஸார் ரோந்து பணியில் போது பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, பையில், 12 எலக்ட்ரானிக் ஜெலட்டின் குச்சி, 15 டெட்டனேட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்த போது, சேலம் மாவட்டம் மேட்டுபாளையூரை சேர்ந்த பழனிச்சாமி (27) என்பது தெரிந்தது. எதற்காக வெடி பொருட்கள் வைத்திருந்தார் என்பது குறித்து டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

thanks :dinamalar

வாசிப்பவர்கள் கவனிக்க :


இது இன்று அன்றாடம் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வைப் போல பேசப் படுகிறது.ஆனால் இதுவே ஒரு சிறு பான்மை சமுதாயத்தை சார்ந்ந்த ஒரு அப்பாவியாய் இருந்தால் அவன் கையில் ஒரு சிறு தீப்பெட்டி தான் இருந்தது என்றாலும் கூட இன்றைய தினசரிகளும் மானங்கெட்ட சில தொலைக் காட்சிகளும் இங்கே நான் கொடுத்திருக்கும் தலைப்பை தான் போட்டிருக்கும் என்பதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.உதாரணமாக கழிந்த மாதங்களில் சென்னையை தகர்க்க சதி என்று ஒரு ஈ மெயில் வந்ததாக சொல்லி எவ்வளவு பரபரப்பாக பேசப் பட்டது என்பதன்யும் அதற்கு ஒரு மத சாயம் பூசப் பட்டத்தையும் எல்லோரும் அறிந்தே இருந்தோம்.` ஆனால் அந்த உண்மை குற்ற வாளி கைது செய்யப் பட்ட பிறகு அது எத்தனை பத்திரிகை களில் தலைப்பு செய்தியானது .இன்னும் அதனை செய்தவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இனியவர்களே நீங்கள் மனிதர்கள் எனபது உண்மை என்றால் இவர் களின் போலிகளையும் புளுகுகளையும் அறிந்து கொள்ளும் அறிவுடையவர்கள் என்றால் இனி இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது உங்கள் குறைந்த பட்ச எதிர்ப்பயாவது தெரிவியுங்கள்.இல்லை என்றால் இவர்களின் கணக்கு படி செம்மறி ஆட்டுக் கூட்டமாய் நாமும் வாழ வேண்டியது தான்.


அன்புடன்


இறை அடிமை

No comments: