Monday, March 3, 2008

மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பா.ஜ.,

புதுடில்லி: "சேது சமுத்திர திட்டம் குறித்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பா.ஜ., தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் விஜய்குமார் மல்கோத்ரா கூறுகையில், "சேது சமுத்திர திட்ட விவகாரம் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் மத்திய அரசு தவறான போக்கை கடைபிடித்து வருகிறது. ராமர் பாலத்தை சேத படுத்தாமல் மாற்று வழியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இந்துக்களின் மத நம்பிக்கையை சீர்குலைக்காத வண்ணம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசு தான் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கூறி சுமுக முடிவு எட்ட வழிவகை செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை' என்றார்.

No comments: