Monday, June 2, 2008

ஆட்டயப் போட்டதுல வீட்டக் கட்டுது இஸ்ரேல்


ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் புதிய வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்

Monday, 06.02.2008, 09:21am (GMT)

மத்திய கிழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியாக பாலஸ்தீனர்களும் சர்வதேச சமூகத்தினரும்

கருதும் ஒரு இடத்தில் யூதக் குடியேற்றக்காரர்களுக்காக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றை

இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இத்திட்டம், ஜெருசலேமில் தங்களது நிலையை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இத்திட்டம் சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.மன்ற தீர்மானங்களையும் நிச்சயமாக மீறுகிறது என்று பாலஸ்தீன அரசு கூறியுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் அல்மர்ட், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் சமாதானப் பேச்சுக்களை நாளை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்

No comments: