Saturday, August 2, 2008

ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....


தவ்ஹீத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்என் கணவரை சிக்க வைத்து விட்டனர்* ஷேக் அப்துல் கபூரின் மனைவி புகார்

ஆகஸ்ட்



திருநெல்வேலி:"தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் பிரச்னையில் எனது கணவரை சிக்கவைத்து விட்டனர்' என, நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா தெரிவித்துள்ளார்.குண்டு வைக்க திட்டமிட்டதாக நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா, நேற்று தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதே மனுவை, நேற்று நெல்லை கோர்ட்டிலும் வெளியிட்டனர்.



அதில் தெரிவித்திருப்பதாவது:எனது கணவர் கபூர் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏ.ஆர்., செருப்புக் கடையில் வேலை பார்த்தார். அவர் ஆரம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கில் மாநில அமைப்பாளராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு திருச்செந்தூர் லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.



பின்னர் தவ்ஹீத் ஜமாத்தின் பரங்கிமலை கிளைச் செயலராகச் செயல்பட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சென்னை ஆலந்தூரில் ஒரு பள்ளி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அந்தச் சிறுமிக்காகப் போராடி நீதி கிடைக்கச் செய்தார். ஜூலை 13ம் தேதி எனது தம்பி திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன் வரவேற்பு விழா பேட்டையில் நடந்தபோது அதில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.



பேட்டை மகதூம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் ஆகியோருக்கு இடையே யார் நிர்வாகத்தை நடத்துவது என்பது தொடர்பாக மோதல் நடந்தது. இதில் என் கணவர் தவ்ஹீத்தில் இருந்தாலும் சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூலை 27ம் தேதி சீருடை அணியாத போலீசார் வந்து எனது கணவரை அழைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் எனது கணவர் கைதானது குறித்து நாளிதழ்களைப் பார்த்து அதிர்ந்து போனேன்.



எனது கணவர் மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூர் ஜமாத் பிரச்னையால் உளவுத் துறையினர் திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.மறுநாள் சிறையில் அவரிடம் பேசியபோது, "சுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம் என்றும் இதன் மூலம் உள்ளூர் பாதுகாப்பை அதிகப்படுத்து வோம் எனவும், மீறினால் உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைப் போம்' எனவும் போலீசார் கூறியதாகச் சொன்னார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ., க்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments: