Thursday, March 27, 2008

நவீன ஞானோதயம் ?!

உபி, பிகார், டெல்லியில் சிவசேனா கலைப்பு!

வியாழக்கிழமை, மார்ச் 27, 2008

டெல்லி: மும்பையில் வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிவசேனா கட்சியினர் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

இது குறித்து வட மாநில சிவசேனா கட்சித் தலைவர் ஜெய் பகவான் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,

சிவசேனா கட்சி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாறி விட்டது. அக்கட்சி தன்னுடைய தேசிய கொள்கைகளிலிருந்து மாறி மகாராஷ்டிர மாநிலம் என்ற வட்டத்துக்குள் நின்று விட்டது.

இந்தியாவை மீண்டும் ஒரு முறை துண்டாட நினைக்கும் இக்கட்சியில் இனியும் தொடர நாங்கள் விரும்பவில்லை.

தனி நாடு கோரும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் காலிஸ்தான் கமாண்டோ படை போன்ற பயங்கரவாதிகளுக்கும் சிவசேனாவுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

No comments: