Thursday, April 3, 2008

மானங்கெட்ட மனித பிறவிகள்

பழைய அத்வானியை மறந்துவிடுங்கள் முஸ்லிம்களுக்கு பாஜக தலைவர் வேண்டுகோள் புதுடில்லி, ஏப். 2

பழைய அத்வானியை மறந்துவிட்டு புதிய அத்தியா யத்தை அவருடன் இணைந்து தொடங்குவோம் என்று பாஜக சிறுபான்மையினர் முன்ன ணியின் தலைவர் ஷா நவாஸ் ஹூசேன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

ஷாநவாஸின் இந்த அறிவிப்பு பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் தலைமை வட்டாரங்களில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் ஏப்ரல் 4 முதல் வரை பாஜகவின் சிறு பான்மையினர் முன்னணி மாநாடு நடைபெறுவதை ஷாந வாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.

அத்வானி முன்பு தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்வ தாக இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளப்படும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமை கருதுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அத்வானியின் தலைமையில் எதிர்கொள்ளப் போவதால் நடந்தவைகளை மறந்துவிட்டு புதிய பாதையை படைப்போம் என்று முஸ்லிம் மக்களுக்கு ஷாநவாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் மத்தியில் அத்வானி குறித்த நல்லெண் ணங்களை உருவாக்கும் முயற்சியில் பாஜக இறங்கி விட்டதெனத் தெளிவாகி வருகி றது. அத்வானியும் தன்னைப் பற்றிய தீவிரமானவர் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். கந்தகார் மற்றும் ஜின்னா விவகாரங்களில் அத்வானி சிக்கி திண்டாடியது இந்த முயற்சியின் விளைவே.
2004 நாடாளுமன்ற தேர்த லின் போது சில முஸ்லிம்கள் வாஜ்பாய் ஹிமாயத் கமிட்டி ஒன்றை உருவாக்கி வாஜ்பாய் கட்சிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்தனர். இதனால் தீவிர பாஜகவினரின் ஆத்திரத் தை சம்பாதிக்க கட்சி தலை மை தேர்தலில் தோல்வியை யும் தழுவியது. வாஜ்பாய்க்கே இந்த தந்திரம் வெற்றி தேடித்த ராத போது அத்வானிக்கு எப் படி உதவும் என்று சில பாஜக வினர் கேள்வி எழுப்புவது நியாயந்தானே.

Thanks: Theekkathir


இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் தரமிறங்கி நம்முடைய வீடுகளுக்கே வந்து பத்துப் பாத்திரம் தேய்த்து பணிவிடை செய்து "நான் ரொம்ப நல்லவன்னு " சொன்னாலும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.பன்றி என்ன தான் பன்னீரில் குளிச்சிட்டு வந்தாலும் பளிச்னு அடிக்கிற வாசம் சொல்லிடும் வந்திருக்கிறது பண்ணி தான்னு.

இனிய சமுதாயமே இன்று இந்த இந்தியாவின் அரசியலை நிற்ணயிக்கும் சக்தியாக வல்ல அல்லா நம்மை ஆக்கி வைத்திருக்கிறான்.இன்று இந்த சூழல் வருவதற்க்காக போராடிய அனைத்து உள்ளங்களும் இன்று இறைவனின் கிருபையால் அவர்களின் லட்சியத்தை அடைய போகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.இந்த நிலை என்றும் நிலைக்க நீங்கள் ஆசைப் பட்டால் உங்களில் கருத்து வேற்றுமை மறந்து இறைவனின் பாதையில் ஈயத்தால் வார்க்கப் பட்ட சுவரை போல ஒன்று சேருங்கள்.உங்கள் தலைவர்களை குறை சொல்ல வில்லை.ஆனால் உங்களின் லட்சியம் உங்களை முன்னேற்ற வேண்டும்.அடிமை வாழ்வு வாழ்வதில் அர்த்தம் இல்லை .இந்த இந்தியாவில் நாம் உண்மையான சுதந்திர வாழ்க்கை வாழ உங்கள் லட்சியங்களை உங்கள் தொலை நோக்கு பார்வைகளை உங்கள் தலைவர்களுக்கு விளக்குங்கள். பிறரை குறை கூறி நேரத்தை விரயம் செய்வதை விட என்னுடைய அமலுக்கு என் இறைவன் கூலி தர போது மானவன் என்ற எண்ணத்தோடு இந்த சமுதயதிற்காய் எதையாவது சிந்தியுங்கள் .இனிய ஒரு லட்சிய பயணத்தை உங்கள் சந்ததிகளுக்காய் தொடங்குங்கள். நம்மை சக்தி படுத்த இதை விட ஒரு அரிய சந்தர்ப்பம் இனி வருமோ என்னவோ? கிடைத்ததை கெடுத்து விடாமல் நம் சந்ததிகளுக்கு கிடைக்கப் போவதை நினைத்து செயல் படுவோம்.மொழி இன நிற வேறுபாடு அற்ற ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.இதனையே லட்சியமாய் கொண்டிருக்கும் தலைவர்களுடன் அணி சேருவோம்.


என்றும் அன்புடன்

இறை அடிமை

No comments: