Sunday, March 9, 2008

முகமது நபி கேலிச் சித்திரம்: ஆப்கானில் ஆர்ப்பாட்டம்


டென்மாக் நாட்டுப் பத்திரிகைகளில் இறைதூதர் முகமது அவர்களின் கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டதைக் கண்டித்து, ஆப்கானின் மேற்கு நகரான ஹெராத்தில் பெருமளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், டச்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், குரானை விமர்சித்து, ஒரு திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


அந்த நாடுகளின் தேசியக் கொடிகளை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ நாடுகளின் படையிலிருந்து அந்நாட்டுப் படைகளை விலக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

Thanks:Bbctamil

No comments: