Friday, April 25, 2008

அப்பாவி முஸ்லிம்கள் மீது அடக்கு முறை ........................

தென்காசி இனக்கலவர வழக்கு மதுரை கோர்ட்டிற்கு மாற்றம்

ஏப்ரல் 26,2008,00:00

மதுரை : தென்காசியில் இரு பிரிவினருக்குள் மோதல் தொடர்பாக பதிவான 3 வழக்குகள் மேல் விசாரணைக்காக மதுரை இனகலவர வழக்குகளுக்கான சிறப்பு செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டன. இவ்வழக்குகளை மே 9ம் தேதிக்கு நீதிபதி ஜானத்தன் ஞானையா தள்ளிவைத்தார். தென்காசியில் 2.3.2007ல் இரு பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பைசேர்ந்தவர்கள் அம்மன் கோயில், புதிய பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் வாகன மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அரசு பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து செய்யது ஒலி, ராகப்பா, நயினார் முகமது, சேக் ஒலி உட்பட 49 பேர் மீது தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வழக்குகள் தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தன. ஏற்கனவே இவ்வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். மேல் விசாரணைக்காக இவ் வழக்குகளை மதுரை கோர்ட்டிற்கு மாற்றம் செய்து தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. மதுரை கோர்ட்டில் நேற்று இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன. குற்றம் சாட்டப்பட்ட 49 பேரும் ஆஜராயினர். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜராயினார். விசாரணையை மே 9ம் தேதிக்கு நீதிபதி ஜானத்தன் ஞானையா தள்ளிவைத்தார்.

நன்றி : தினமலர்

இந்தப் பத்திரிகைசெய்தி மூலம் அந்த சம்பவம் முஸ்லிம்களால் மட்டும் நடத்தப் பட்ட தாக ஒரு பிம்பம் உருவாக்கப் படுகிறது.இனக் கலவரம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் கைது என்று எல்லாம் சொல்லும் இந்தப் பத்திரிகை இன்னொரு பிரிவினரைப (தனக்கு தானே குண்டு வைத்து அப்பவிமுச்ளிம்கள் மீது பழி போட நினைத்த பாசிடுகளை) பற்றி ஒரு வரி கூட குறிப் பிடாதடு இவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக காண்பிக்கிறது.இனி எனும் இந்த சமுதாயம் தற்காப்பு சிந்தனையும் சமுதாய எழுச்சியும் கொண்ட ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட்டு நின்றால் தான் இனி வரும் காலங்களில் நம் தலை முறை தலை நிமிர்ந்து நிற்க்கமுடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது.

No comments: