Wednesday, May 28, 2008

ஆட்சியைப் பிடிக்க சுயேட்சை க்களை இரகசிய இடத்தில் மறைத்துவைத்திருக்கும் ப ஜ க


சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
Thursday, 05.29.2008, 05:33am (GMT)


கர்நாடகாவில் பா.ஜ.வை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் ரகசிய இடத்தில் பாரதிய ஜனதா தங்க வைத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களை பிடித்த பா.ஜ. நாளை பதவியேற்கிறது.

முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். பெரும்பான்மைக்கு மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேச்சைகளும் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், 80 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் 28 இடங்களை பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி நடந்தால், ஆட்சி அமைக்க 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

இதனால், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் விலை பேசலாம் என்று பா.ஜ. கருதுகிறது. எனவே, 6 சுயேச்சை எம்.எல்..க்களையும் பா.. நேற்று முன்தினம் இரவே ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது. அவர்கள் கர்நாடகாவிலேயே இருக்கிறார்களா அல்லது வேறு மாநிலத்துக்கு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்களா என தெரியவில்லை.

நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்பாகதான் அவர்கள் அங்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தமிழ் நியூஸ்

இஸ்ரேல் பதுக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் -அமெரிக்க அதிபரின் குற்ற சாட்டு


இஸ்ரேலிடம் 150 அணு குண்டுகள் காட்டர் எச்சரிக்கை !


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் இஸ்ரேல் மொத்தம் 150 அணு குண்டுகளை உலக சமுதாயத்திற்கு தெரியாமல் பதுக்கி வைத்திருப்பதாக உலக சமுதாயத்திற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இந்த 150 அணு குண்டுகளும் சர்வதே சட்டங்களுக்கு உட்படாத திருட்டுத்தனமான குண்டுகள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா 12.000 அணு குண்டுகளை வைத்துள்ளது, ரஸ்யாவிடமும் அதேயளவு உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிடம் பல நூற்றுக்கணக்கான அணு குண்டுகள் உள்ளன என்றும் 83 வயதுடைய ஜிம்மிக்காட்டர் வேல்ஸ்சில் வைத்துத் தெரிவித்தார். மற்றைய நாடுகள் தம்மிடம் அணு குண்டு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளன ஆனால் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதே பாரிய தவறு என்றும் தெரிவித்தார். காட்டரின் கருத்து பொறுப்பற்ற கருத்தென்று இஸ்ரேலிய உளவுப்பிரிவு தலைவர் அகரோன் சீவி பார்காஸ் தெரிவித்தார். இது குறித்து காட்டர் மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அதேவேளை பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மதித்து செயற்படவில்லை என்றும் அவர் குறைகூறினார். காட்டர் 2002 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி : அலைகள்

Sunday, May 25, 2008

தினமலருக்கு கடுமையான கண்டனம் !

"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" - MNP தலைவர் ஜின்னா அறிக்கை
தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது குற்றமா? மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் கேள்வி

இன்றைய (25.05.2008) தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி குறித்தும், தொடர்நது தினமலர் நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருவது குறித்தும் கண்டனம் தெரிவித்து மனித நீதிப் பாசறையின் மாநிலத் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்கள்

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான ""பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'' சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல; பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திரத் தின அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திரதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்.நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் .

1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.

நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்.நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது.

இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. ""இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா? என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது

அப்பாவி இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சி ..........

சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்தை ி கண்டு உலகமேவியக்கும் இந்த சூழலில் சுதந்திர தினத்தை முழுமையான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டியது நாட்டுப்பற்று உடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தலையாய கடமைகளில் ஒன்றாகும்,இதனை எவரும் மறுக்க முடியாது ஆனால் இன்று சுதந்திர தினத்தை தேச துரோகிகள் மட்டும் கொண்டாட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சுதந்திரத்திற்க்காக பலப்பல தியாகங்கள் செய்த எத்தனையோ சமுதாயங்களின் தியாக வரலாறுகள் திரித்து திசை திருப்பப் படுகின்றன.இதற்காக கல்வித்துறையில் நுழைந்த சில பல பாசிஸ்டுக்கள் இந்த வரலாற்று திரிப்பு பணியை செவ்வனே செய்து முடித்து விட்டார்கள். வரலாறு இல்லாத இந்த வீணர் களின் வேலையால் உண்மையான பல தியாகிகளின் வரலாறுகள் அழிக்கப் பட்டு விட்டன.இந்த சூழ்நிலையில் இந்திய சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இஸ்லாமியர்களை கவுரவிக்கும் வகையிலும் இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்றை இந்த உலகுக்கு காண்பிக்கவும் வேண்டி கடந்த பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் ஓரணியில் நின்று இந்த தினத்த சீரும் சிறப்போடும் விழாக்கோலம் பூண்டு கொண்டாடி வருகிறார்கள். இதனால் வயித்தெரிச்சல் பிடித்த பாசிஸ்டுக்கள் அவர்களால் முடிந்த அனைத்து இடையூறையும் கொடுத்து வருவது வாடிக்கை.இதில் காவி வெறி பிடித்த பல அதிகாரிகளும் அடக்கம்.நிலைமை இப்படி இருக்க எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எங்கள் நாட்டுப் பற்றை யாராலும் குறைத்து விட முடியாது என்பதனை இந்த உலகுக்கு காட்ட வேண்டிய கட்டயாத்தில் இன்று இந்த சமுதாயம் இருந்து கொண்டு இருக்கிறது.


இருப்பினும் அத்தனை இடையூறுகளையும் தாண்டி ஒட்டு மொத்த தியாகிகளையும் கவுரவிக்கவேண்டி ஒரு மரியாதை அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது இன்று பொது அறிவுடைய அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால் சமீப காலமாக சந்தையில் தன்னுடைய மதிப்பையும் வியாபாரத்தையும் இழந்து வரும் சில தினசரி பத்திரிகைகள் தன்னுடைய வியாபாரத்தை அதிகரிக்க வேண்டி போலியான தகவல் களையும் தேவையற்ற பரபரப்புகளையும் உண்டுபண்ணி சமுதயத்தின் நிம்மதியை கெடுத்து வருகின்றன.உதாரணமாக மேலே நான் குறிப்பிட்ட படி சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்க வியாபாரத்தை பெருக்க இந்த பத்திரிகை உண்டுபண்ணும் வீண் பதட்டத்தை பாருங்கள் .........

தமிழகத்தில் இளைஞர்களுக்கு 'அணிவகுப்பு பயிற்சி' :பின்னணி குறித்து போலீசார் விசாரணை


சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் ஓர் இயக்கத்தைச் சேர்ந்த 500 இளைஞர்கள் "அணிவகுப்பு பயிற்சி'யில் இத்தானை. எவீரும் மர்ருக்க் இவர்கள் நடத்தி வரும் பயிற்சியின் பின்னணி குறித்து, உளவுப் போலீசார் விசாரிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து உஷாரடைந்த சென்னை போலீசார் திடீர் சோதனை நடத்தி, "இறைவன் ஒருவனே' இயக்கத்தைச் சேர்ந்த சையது காசிம், பழனி உமர், மண்ணடி காதர் ஆகியோரை சமீபத்தில் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. மேற்கண்ட அமைப்பின் தலைவனாக செயல்பட்ட, தஞ்சை அதிராமபட்டினத்தைச் சேர்ந்த தவுபீக் என்பவரை கைது செய்ய, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், "வெளிப்படையான அமைப்பு' என கூறிக் கொண்டு, திரைமறைவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகளை, ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்புமாறு உளவுப் பிரிவு போலீசுக்கு, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சமீபத்தில் மாநிலம் முழுதும் நடந்த கண்காணிப்பில், ஒரு பிரிவு இயக்கத்தினர் "அணிவகுப்பு பயிற்சி'யில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 25 வயதுக்கு உட்பட்ட 500 இளைஞர்களை தேர்வு செய்துள்ள அந்த இயக்கத்தினர், ஞாயிறு தோறும் அதிகாலை 5.30 முதல் 6.30 மணி வரை கோவை, சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் "அணிவகுப்பு பயிற்சி'அளித்து வருகின்றனர்.
கோவையில், உக்கடம் மைதானத்தில் அளிக்கப்படும் பயிற்சியில் 200 இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். பயிற்சியின் போது சுய ஒழுக்கம், உடல் திறன் மற்றும் மனவலிமை யை மேம்படுத்தும் ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன. இது பற்றி தகவலறிந்த உளவுப் பிரிவு போலீசார், பயிற்சியை ரகசியமாக போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.போலீசுக்கு இணையாக அளிக்கப்படும் அணிவகுப்பு பயிற்சியை கண்ட அதிகாரிகள், எதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது, பயிற்சி அளிப்பது யார், யாரெல்லாம் இதில் பங்கேற்கின்றனர் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி கூறியதாவது:சந்தேகத்துக்குரிய இயக்கத்தினரின் "அணிவகுப்பு பயிற்சி' தொடர்பான தகவல்கள் திரட்டப் பட்டுள்ளன. அந்த இயக்கத்தினர், இந்த ஆண்டில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும், "கொடி அணிவகுப்பு' நடத்த ஏதுவாக இப்போதிருந்தே பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த இயக்கத்தினர் ஆள் கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவாகி இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.



ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்துக்கு போட்டி? :




இந்து இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.,ல் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி ஆகியவை கட்டாயமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஆண்டுதோறும் விஜயதசமியன்று நடத்தப்படுகிறது. அதற்கு போட்டியாகவே இளைஞர்களை திரட்டி "அணிவகுப்பு ஒத்திகை' நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த 18ம் தேதி அதிகாலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த 20 இளைஞர்களை மேலப்பாளையம் போலீசார் எச்சரித்து விரட்டினர். மறுநாள், மற்றொரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட முயன்றனர். போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் இளைஞர்களை வெளியேற்றியது. ஆனால், சென்னையில் மண்ணடி, திருச்சியில் துவரங்குறிச்சி, கோவையில் உக்கடம் ஆகிய பகுதிகளில் இவர்களது பயிற்சி இப்போதும் தொடர்ந்து நடக்கிறது.
-நமது சிறப்பு நிருபர்-

நன்றி : தினமலர்